குரூப்-1 தேர்வு அறிவிச்சாச்சு... ஆகஸ்ட் 9 தான் விண்ணப்பிக்க கடைசி நாள்

குரூப்-1 தேர்வு அறிவிச்சாச்சு... ஆகஸ்ட் 9 தான் விண்ணப்பிக்க கடைசி நாள்!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தும் குரூப் 1 முதல் நிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 9-ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
74 பணியிடங்கள்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப்-1 தேர்வை நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு அறிவிப்பு இப்போது வெளியிடப்பட்டுள்ளது. துணை ஆட்சியர், மாவட்ட காவல்துணை கண்காணிப்பாளர்கள், உதவி வணிக வரி அலுவலர்கள், மாவட்ட பதிவாளர்கள் என பல பதவியிடங்கள் குரூப்-1-ன் கீழ் வருகின்றன. இந்த ஆண்டு இந்தப் பிரிவில் மொத்தம் 74 பணியிடங்கள் காலியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

துணை ஆட்சியர்
துணை ஆட்சியர் பணியிடங்கள்-19
, காவல் துணை கண்காணிப்பாளர்கள்-26
, உதவி வணிக வரி அலுவலர்கள்-21,
 மாவட்ட பதிவாளர்கள்-8 
என குரூப் 1  தொகுதியில் காலியாகவுள்ளதாகத் தெரியவந்துள்ளது. காலியாகவுள்ள இந்த 74 பணியிடங்களை நிரப்ப தேர்வை டிஎன்பிஎஸ்சி நடத்தவுள்ளது.
எந்த இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்....
குரூப் 1 முதல் நிலைத் தேர்வு எழுத விரும்பும் பட்டதாரிகள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) விண்ணப்பிக்கலாம்.

இறுதித் தேர்வு எழுதியவரும் விண்ணப்பிக்கலாம்...
.
3 அல்லது 4 ஆண்டு பட்டப் படிப்புக்கான இறுதித் தேர்வு எழுதி முடித்து காத்திருப்போரும் தேர்வை எழுதலாம்.

ஆகஸ்ட் 9 கடைசி நாள்

இந்த தேர்வுக்கு பட்டதாரிகள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க ஆகஸ்ட் மாதம் 9-ஆம் தேதி கடைசி நாளாகும்.
3 தேர்வுகள்
இந்த தேர்வு முதல் நிலை தேர்வு, பிரதான தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகிய 3 நிலைகளைக் கொண்டதாகும். ஒரு தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் மறு தேர்வுக்குச் செல்ல முடியும் என்பதை மாணவர்கள் கவனிக்கவேண்டும்.
ஆட்சியராகும் வாய்ப்பு
துணை ஆட்சியர் பணிக்குத் தேர்ந்து எடுக்கப்பட்டால் அவர்கள் சில ஆண்டுகளில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பதவி உயர்வு பெறும் வாய்ப்பு இருக்கிறது. அதுபோல துணை காவல் கண்காணிப்பாளர் பணிக்கு தேர்ந்து எடுக்கப்பட்டால் அவர்கள் சில ஆண்டுகள் கழித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளராக உயர்வு பெறவும் வாய்ப்பிருக்கிறது.
நவம்பர் 8-ல் தேர்வு
முதல் நிலைத் தேர்வு நவம்பர் 8-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்வு தமிழ்நாடு முழுவதும் 33 மையங்களில் நடைபெறவுள்ளது என்று அந்த அரிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சார சட்டத் திருத்த மசோதா முகநுாலில் பகிா்ந்த கருத்துக்கள்

நரேந்திரமோடி அரசு பதவி ஏற்றதில் இருந்து மக்கள் விரோத தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. ஏற்கனவே தொழிலாளர்களுக்கு ஓரளவு பாதுகாப்பு அளிக்கக்கூடிய சில சட்டங்களை நீர்த்துப்போகச் செய்யும் முயற்சியை துவக்கிவிட்டது. 

மசோதா தாக்கல் செய்யப்பட்டால் அகில இந்திய அளவில் வேலைநிறுத்தம் நடைபெறும் என்று சிஐடியு மற்றும் ஏஐடியுசி, ஐஎன்டியுசி உள்ளிட்ட அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் ஏற்கனவே அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன. 
இந்த மசோதாவை தொழிற்சங்கங்கள் மட்டுமல்ல தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், திரிபுரா உள்பட 18 மாநில அரசுகளும் கடுமையாக எதிர்க்கின்றன. பல்வேறு கட்சிகள் தங்களது பிரதிநிதிகள் மூலமாக நாடாளுமன்ற நிலைக்குழுவிலும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளன.

கால்நடை துறையில் பிறந்த தேதியில் சர்ச்சை ஓய்வு பெற்றவருக்கு மீண்டும் பணி : உயர்நீதிமன்றம் உத்தரவு


மதுரை: பிறந்த தேதியில் மாற்றம் செய்ததை அங்கீகரித்தபின் அதை ரத்து செய்த பெரியகுளம் கால்நடை உதவி இயக்குனரின் உத்தரவை ரத்து செய்த உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை, ஓய்வு பெற்ற உதவியாளருக்கு மீண்டும் பணி வழங்க உத்தரவிட்டது.தேனி லட்சுமிபுரம் கால்நடை மருந்தக உதவியாளர் சன்னாசி தாக்கல் செய்த மனு: பெரியகுளம் கால்நடை மருத்துவமனை உதவியாளராக 1990ல் சேர்ந்தேன். அலுவலக பணிப் பதிவேட்டில் பிறந்த தேதி 1956 ஏப்.,13 என தவறுதலாக குறிப்பிடப்பட்டிருந்தது. பெரியகுளம் நகராட்சி பிறப்புச் சான்றின்படி உண்மையான பிறந்ததேதி 1959 அக்., 7. ஆனால் பெற்றோர் தவறுதலாக 1956 என குறிப்பிட்டு பள்ளியில் சேர்த்தனர். நகராட்சி பிறப்புச் சான்றின்படி பணிப் பதிவேட்டில் திருத்தம் செய்யுமாறு கால்நடை உதவி இயக்குனரிடம் 1995 ல் மனு அளித்தேன். தேதியில் மாற்றம் செய்ய உதவி இயக்குனர், மண்டல இணை இயக்குனர் ஒப்புதல் அளித்தனர்.
உதவி இயக்குனர் 2013 அக்.,28ல் என் பிறந்த தேதி மாற்றத்தை ரத்து செய்து, 1956 ன்படி ஓய்வு பெறும் தேதி 2014 ஏப்.,13 என நிர்ணயித்தார். விதிகள்படி பிறந்ததேதியில் மாற்றம் செய்ய பணியில் சேர்ந்த 5 ஆண்டுகளுக்குள் 
விண்ணப்பிக்க வேண்டும். அதன்படி விண்ணப்பித்ததை ஏற்று அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்தனர். அதை ரத்து செய்ய அதிகாரம் இல்லை. 1959ல் பிறந்த தேதிப்படி நான் ஓய்வு பெற 3 ஆண்டுகள் உள்ளன. உதவி இயக்குனரின் உத்தரவை ரத்து செய்து, தொடர்ந்து பணிபுரிய அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டார்.நீதிபதி எஸ்.வைத்தியநாதன் விசாரித்தார்.உதவி இயக்குனர், ''பிறந்த தேதியில் மாற்றம் செய்ய மனுதாரர் 5 ஆண்டுகளுக்குள் விண்ணப்பித்தது போல் போலி ஆவணங்கள் தயாரித்துள்ளார்,'' என பதில் மனு செய்தார்.
நீதிபதி: மனுதாரர் பிறந்த தேதி நகராட்சி பதிவேட்டின்படி சரியாக உள்ளது. அரசுத்தரப்பில் கூறுவது நம்பும்படி இல்லை. பிறந்த தேதியில் மாற்றம் செய்யக்கோரிய மனுதாரரின் விண்ணப்பத்தில் அதிகாரிகள் முறையாக கையெழுத்திட்டு அங்கீகரித்துள்ளனர். பிறந்த தேதி பதிவு மாற்றத்தை ரத்து செய்த உதவி இயக்குனரின் உத்தரவை ரத்து செய்கிறேன். மனுதாரர் பணியில் இல்லாத காலத்திற்கு சம்பளம் வழங்க இயலாது. மனுதாரரை பணித் தொடர்ச்சியுடன் மீண்டும் ஒரு மாதத்தில் பணியில் சேர்க்க வேண்டும் என்றார். மனுதாரர் வழக்கறிஞர் ஆர்.ஏ.மோகன்ராம் ஆஜரானார்.

Executive Engineer / Electrical Modification and Postings orders issued.

TAMIL NADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LIMITED
                                              (SECRETARIAT BRANCH)
                                               
                                                                                                144, ANNA SALAI
                                                                                                CHENNAI-600 002.

Memorandum No.25824/A1/A11/2015-1,   dated   17.07.2015.

         Sub:    Establishment - Class I Service - Executive  Engineer/Electrical –
                   Modification and Posting - Orders - Issued.

         Ref:    (i) (Per.) CMD TANGEDCO Proceedings No.47 (SB) dated 11.03.2015
                   (ii) (Per.) CMD TANGEDCO Proceedings No.154 (Adm.Branch) 
                          dated 28.04.2015                
                                                                     *****
          The order issued  in  the  reference first cited, posting Tmty.P.Latha Maheswari, Assistant Executive Engineer/Electrical/O&M/Kuttalam/Nagapattinam Electricity Distribution Circle, on promotion as Executive Engineer/O&M/Rural/Tirunelveli/ Tirunelveli Electricity Distribution Circle, is hereby cancelled.

A.Adm.O to Adm.Officer Suitability called for

TAMIL NADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LTD.
ADMINISTRATIVE BRANCH


From

Er. A. MANIVANNAN, M.E.,
Chief Engineer/ Personnel,
                        (addl.charge),
8th Floor, NPKRR Maaligai,
144, Anna Salai,
Chennai - 600 002.
To

The Superintending Engineers
             Concerned.


Letter No.055120/1066/G31/G312/2015-1, dated  17.07.2015.

Sir,

Sub :
Establishment - Class II Service - Assistant Administrative Officers - Selection for Promotion to the post of Administrative Officer in Class II Service - Service & D.P. particulars - Called for.

மத்திய அரசு துறைகளில் 1000 இளநிலை பொறியாளர் பணி:எஸ்எஸ்சி அறிவிப்பு

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 1000 இளநிலை பொறியாளர் (குரூப் பி) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை எஸ்எஸ்சி வெளியிட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையான சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் துறையில் டிப்ளமோ முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: இளநிலை பொறியாளர்
காலியிடங்கள்: 1000
வயதுவரம்பு: 01.08.2015 தேதியின்படி கணக்கிடப்படுகிறது.
தகுதி: சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9300 - 34800 + தர ஊதியம் ரூ.4,200.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. இதனை நெட் பேங்கிங் மூலம் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி, பெண்கள், முன்னாள் ராணுவத்தினர் தேர்வு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை: http://ssconline.nic.in அல்லது http://ssconline2.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 06.12.2015
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: பகுதி I - 07.08.2015, பகுதி II - 10.08.2015
மேலும் விண்ணப்பதாரர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு முழுமையான விவரங்கள் அறிய http://vacancycollection.nic.in/ssc/notice/examnotice/final_Notice_JE_2015.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

 Executive Engineers / Electrical Transfer, Modification and Postings  orders  issued.

TAMIL NADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LIMITED
(SECRETARIAT BRANCH)
                                               
                                                                                                144, ANNA SALAI
                                                                                                CHENNAI-600 002.

Memorandum No.37903/A1/A11/2015-1,  dated   14.07.2015

         Sub:    Establishment - Class I Service - Executive  Engineer/Electrical –
                   Transfer and Posting - Orders - Issued.

புதிய மின் நிலையம் 'டெண்டர்' வெளியீடு

வட சென்னை புதிய அனல் மின் நிலைய கட்டுமான பணிக்கான, 'டெண்டரை'
மின் வாரியம் வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு மின் வாரியம், திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில், 'வட சென்னை மூன்று' என்ற பெயரில், 800 மெகாவாட் திறனுடைய, அனல் மின் நிலையம் அமைக்க முடிவு செய்துள்ளது.இதற்கான கட்டுமான பணிகளை மேற்கொள்ள, தகுதி வாய்ந்த ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்ய, டெண்டர் அறிவிப்பை, மின் வாரியம் வெளியிட்டுள்ளது. அரசு மற்றும் மின் வாரிய இணையதளங்கள் வாயிலாக, டெண்டர் படிவத்தை ஆக., 21ம் தேதி வரை, பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்த விண்ணப் பத்தை சமர்ப்பிக்க செப்., 30 கடைசி நாள். எரிசக்தி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:


ராமநாதபுரம் மாவட்டம் உப்பூரில், 1,600 மெகாவாட் திறனுடைய, அனல் மின் நிலைய பணிக்கான, ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்ய, கடந்த மாதம், டெண்டர் கோரப்பட்டது. தற்போது, 4,800 கோடி ரூபாயில் அமைக்கப்பட உள்ள, வட சென்னை புதிய மின் நிலையத்திற்கு, டெண்டர் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த மின் நிலையங்களின் பணிகளை, 2016 ஜனவரியில் துவக்கி, 2019ல் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். மின் வாரியத்திற்கு, வட சென்னையில், அனல் மின் நிலையம் ஏற்கனவே உள்ளது. அதே வளாகத்தில் தான், புதிய மின் நிலையம் கட்டப்பட உள்ளது

http://www.dinamalar.com/news_detail.asp?id=1295357

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்து பொது நல வழக்கு இன்று மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் விசாரணைக்கு வருகிறது

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றத்தில் திரு. எங்கெல்ஸ் அவர்களால் தொடரப்பட்ட பொது நல வழக்கு(வழக்கு எண்.11987 / 2015) நாளை நீதிமன்ற எண்.9ல் விசாரணைக்கு வரவுள்ளது. 
 
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் பணி ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பிடித்தம் செய்த தொகை வழங்கவும், ஓய்வூதியம் வழங்க உத்தரவிடக் கோரப்பட்டுள்ளது. 
 
மேலும் இதுவரை பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் பிடித்தம் செய்த தொகையை PFRDAவிடம் தமிழக அரசு ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

LI, CI and FM II Gr. (RWE Cadre) to JE/El. II Grade - Promotion Panel

TAMIL NADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LTD.
ADMINISTRATIVE BRANCH
                                                                                       144, Anna Salai,
Chennai - 600 002.
Memo. No.010489/63/G.3/G.31/2012-4, dated  10.07.2015.

Sub:
Estt. - Class III Service - Promotion to the post of JE/ Electrical II Grade from the category of Diploma Holders of RWE Employees - names selected - Communicated - Based on the Order dt:22.06.2015 in Hon'ble High Court of Madras.

TA to JE/Electrical II Grade Promotion Panel -

BY EMAIL


TAMILNADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LTD.
ADMINISTRATIVE BRANCH
                                                                                  144, Anna Salai,
                                                                         Chennai - 600 002.

Memo. No 046895/350/G.3/G.3(1)/2012-3 , dated   10.07.2015.


Sub:
Establishment – Class III Service – Promotion to the post of Junior Engineer/ Electrical II Grade from the category of Technical Assistant/Electrical – List of names selected/ Non-Selected in the Panel Orders - Communicated - Based on the Order dt:22.06.2015 in Hon'ble High Court of Madras.

Madras high court judgments June 2015


No.
Case No.
Title (Click Here for Text Judgment)
Date ofJudgement
1
W.P.(MD)No.8107 of 2015
14-05-2015
2
W.P.(MD)No.2509 of 2015
4/6/2015
3
W.P(MD)No.3660 of 2015

பி.எப் தொகையின் திரும்பப்பெறும் அளவை 75%ஆக குறைக்கத் திட்டம்

மாத சம்பளம் பெறும் ஊழியர்களின் பிராவிடென்ட் பண்ட் தொகைக்கான திரும்பப் பெறும் அளவை 75 சதவீதமாகக் குறைக்க, ஊழியர் சேமலாப நிதி அமைப்பு (EPFO) திட்டமிட்டு வருதிறது. தற்போது இதன் அளவு 100 சவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. பி.எஃ பணத்தை மக்கள் சரியான காரணத்திற்காகப் பயன்படுத்த தவறுவதால் திரும்பப் பெறும் அளவை 75 சதவீதமாகக் குறைத்து மீதமுள்ள தொகையைப் பணியாளரின் ஒய்விற்குப் பின் பென்ஷன் முறையில் அளிக்க முடிவு செய்துள்ளது EPFO அமைப்பு.


100% திரும்பப் பெறுதல்
தற்போது உள்ள முறையின் படி ஊழியர்களுக்கு வேலை பறிபோனால் இரண்டு மாதத்திற்குப் பிறகு முழுத் தொகையும் பெற்றுக்கொள்ளலாம் திருமணச் செலவுகள் போன்ற காரணங்களுக்காகப் பி.எஃ பணத்தில் 100% எடுத்துக்கொள்ளலாம்.

75% மட்டுமே 
ஆனால் ஊழியர் சேமலாப நிதி அமைப்பின் ஆய்வுகளின் படி ஊழியர்கள் மேற்கொண்ட காரணங்களுக்காகப் பணத்தைச் செலவு செய்யாமல் பிறவற்றிக்குச் செலவு செய்வதாகத் தெரிகிறது. இதனைத் தடுக்கவே இத்தகை முடிவுகளுக்கு மத்திய அரசிடம் இவ்வமைப்பு பரிந்துரை செய்துள்ளது. காலப்போக்கில் இதன் அளவு 50 சதவீதம் வரையும் குறைய வாய்ப்புள்ளதாகக் கருத்து நிலவுகிறது.

Tamil Nadu Government Servants Conduct Rules, 1973 - Prescribing additional format to apply for grant - renewal of Passport - Instruction Issued.

CLICK VIEW G.O.Ms.No.71 Dt: July 02, 2015  

அரசு ஊழியர்கள், அதிகாரிகள் கடவுச்சீட்டு பெற விதிகளில் தளர்வு

அரசு ஊழியர்கள், அதிகாரிகள் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) பெற அடையாளச் சான்றோ, ஆட்சேபணையின்மைச் சான்றோ பெற வேண்டியதில்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு முன்னறிவிப்புக் கடிதம் கொடுத்தாலே போதும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
 இதுகுறித்து, அனைத்துத் துறை செயலாளர்கள், துறைத் தலைவர்கள் உள்ளிட்டோருக்கு பணியாளர்- நிர்வாகச் சீர்திருத்தத் துறை செயலாளர் பி.டபிள்யூ.சி.டேவிதார் அனுப்பியுள்ள கடிதம்:
 அரசுத் துறைகளில் பணியாற்றும் அதிகாரிகள், பணியாளர்கள், பொதுத் துறைகளைச் சேர்ந்தவர்கள் கடவுச்சீட்டுகளைப் பெற சில கடினமான நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. இந்த நடைமுறைகளை எளிதாக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் முன்வந்துள்ளது.
 கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும்போது அரசுத் துறைகளின் அதிகாரிகள், அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் தங்களது பணி, தாங்கள் யார் என்பதைத் தெரிவிக்கும் அடையாளச் சான்று அல்லது அரசுத் துறைகளில் இருந்து ஆட்சேபணையின்மைச் சான்றினைச் சமர்பிக்க வேண்டும் என்று ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

 இந்தச் சான்றிதழ்களைப் பெறுவது கடினமாக இருப்பதால் இந்த நடைமுறை இப்போது எளிதாக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடவுச்சீட்டைப் பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கு முன்னதாக, அதுகுறித்த முன்னறிவிப்புக் கடிதத்தை சம்பந்தப்பட்ட அரசுத் துறை உயரதிகாரிக்குத் தெரிவித்தால் போதும். ஆட்சேபணை ஏதும் இருந்தால் சம்பந்தப்பட்ட அந்த உயரதிகாரி மண்டல கடவுச்சீட்டு அலுவலகத்துக்கு அதைத் தெரிவித்து, கடவுச்சீட்டு விண்ணப்பத்தை திரும்பப் பெற்று விடலாம் என்று தனது கடிதத்தில் டேவிதார் தெரிவித்துள்ளார்.

தொழிலாளர் சட்டங்கள்-நிர்வாகவியல் படிப்பு பயில ஆசையா? விண்ணப்பம் செய்ய காலக்கெடு நீட்டிப்பு



சென்னை: தொழிலாளர் சட்டங்கள்-நிர்வாகவியல் படிப்புகளுக்கான காலக்கெடு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக அரசின் தொழிலாளர்-வேலைவாய்ப்புத் துறையின் கட்டுப்பாட்டில் தொழிலாளர் கல்வி நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்வி நிலையத்தின் சார்பில் ஓராண்டு பகுதி நேர முதுநிலை பட்டயப் படிப்பு, தொழிலாளர் சட்டங்களும்-நிர்வாகவியல் சட்டமும் குறித்த ஓராண்டு வார இறுதி பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு முடிந்துள்ளது. ஆனாலும், விண்ணப்பிக்கும் காலக்கெடுவை நீட்டிக்க கோரிக்கைகள் வந்ததால், பட்டயப் படிப்புகளுக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க ஜூலை 15 (பகுதி நேர படிப்பு) மற்றும் 31 (வார இறுதி படிப்பு) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்பங்களைப் பெற்று குறிப்பிட்ட காலத்துக்குள் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பிக்க கட்டணம் ரூ.200. தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் பிரிவினருக்கு ரூ.100. விண்ணப்பக் கட்டணச் சலுகை பெற, ஜாதி சான்றிதழ் நகல் தாக்கல் செய்ய வேண்டும். தபாலில் விண்ணப்பங்கள் பெற விரும்புவோர் ரூ.250-க்கான வங்கி வரைவோலையை The Director, Tamilnadu Institute of Labour Studies, Chennai-5 என்ற பெயருக்கு எடுத்து அனுப்பி பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பங்களை அனைத்து வேலை நாள்களிலும் பெற்றுக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு, துணை இயக்குநர்கள் எஸ்.ராமமூர்த்தி (9655413990), டி.குமரன் (9443109566) ஆகியோரைத் தொடர்பு கொள்ளலாம். தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம், எண்-5, காமராஜர் சாலை, சென்னை-600 005 என்ற முகவரியிலும், 044-28440102, 28445778 ஆகிய தொலைபேசி எண்களிலும் தொடர்புகொள்ளலாம்.




Kanchipuram E.D.C. I.T.I.Helper Direct Recruitment transfer orders

:: TAMIL NADU GENERATION & DISTRIBUTION CORPORATION
(Administrative Branch)
                                                                         8th Floor, NPKRR Maaligai,
                                                                        144, Anna Salai, Chennai-2.

Memo.No.026303/195/G.43/G.432/2014-211,   dated :  06.07.2015.

                   Sub : Establishment – Class IV Service – Transfer & Posting 
                            of ITI Helper (Trainee) by Direct Recruitment – 
                            Orders Issued.

OMBUDSMAN Appeal Petition No 4,15,26,30, of 2015.


r. NoPetition No.Appeal ByDetails of Case(Click on the Detail to view the order)Order Date Uploaded on
4915 of 2015
ÂU. Å. y£Rkz‹,
j/bg Åu‹,
f£oahtaš,
òJ¡nfh£il

6.7.20157.7.2015
4826 of 2015
Thiru E.Ramesh,
No.4, Self help Industrial Estate,
Keelkattalai,
Chennai- 600 117

2.7.20156.7.2015
4729 of 2015
ÂU. nf. uhr¥g‹,
15/64, fΩl«ghisa«,
btŸshs® bjU,
ntY® - 638 182.
30.6.20151.7.2015
4630 of 2015
ÂU.  S. nkhr° Rªj®Á§, f‹åahFkç kht£l«
15.6.201516.6.2015
454 of 2015
Tmt. P. Priyanka,
W/o Pannerselvam,Kundrathur, Chennai – 600 069.

15.6.201516.6.2015

2 வது மனைவிக்கு சட்டப்படி ஓய்வூதியம் உண்டு: உயர்நீதிமன்றம்

முறைப்படி திருமணமாகாவிட்டாலும் 2வது மனைவி சட்டப்படி ஓய்வூதியம் பெற உரிமையுண்டு என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அரிபரந்தாமன் தீர்ப்பு வழங்கியுள்ளார்.கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த தலைமை காவலரான ஸ்டான்லி கடந்த 1973 ஆம் ஆண்டு ஜூன் 6ம் தேதி சுகந்தி என்ற பெண்ணை திருமணம் செய்தார். இருவருக்குமான திருமண வாழ்க்கையில் ரூத் எஸ்பியா என்ற மகள் பிறந்தார். அதன் பின் இரண்டு வருடங்களில் கணவன்-மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். முதல் திருமணத்திற்கான பந்தம் முறிவடையாத நிலையில், கடந்த 1976 ஆம் ஆண்டு ஜூன் 23-ந் தேதி சுசீலா என்ற பெண்ணை ஸ்டான்லி திருமணம் செய்துகொண்டார்.அவர்களுக்கு நக்கீரன் என்ற மகன் பிறந்தார். தற்போது நக்கீரனுக்கு 35 வயதாகிறது. இந்நிலையில் கணவரிடமிருந்து விவாகரத்து கேட்டு முதல் மனைவி சுகந்தி வழக்கு தொடர்ந்தார்.

அவ்வழக்கின் மீதான விசாரணையின் முடிவில் கடந்த 2003 ஆம் ஆண்டு ஈரோடு மாவட்ட நீதிமன்றம் சுகந்தி-ஸ்டான்லி இடையேயான திருமண பந்தத்தை முறித்து வைத்தது. பின்னர் கடந்த 2005 ஆம் ஆண்டு சுகந்தி காலமானார்.அதே சமயம் 2001ஆம் ஆண்டு காவல்துறை பணியில் இருந்து ஓய்வு பெற்ற ஸ்டான்லி, தனது ஓய்வூதிய தொகையை மாதா மாதம் பெற்று வந்தார். பின்னர் கடந்த 2007ஆம் ஆண்டில் தன்னுடைய மரணத்திற்கு பின் 2வது மனைவியான சுசீலாவுக்கு ஓய்வூதியம் வழங்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஸ்டான்லி பரிந்துரை கடிதம் கொடுத்தார்.

பின்னர் 2011 ஆம் ஆண்டு ஸ்டான்லி காலமானார்.இதையடுத்து கடந்த 2014 செப்டம்பர் மாதம் அம்மாவட்ட கண்காணிப்பாளர், ஸ்டான்லியின் ஓய்வூதிய தொகையை சுசீலாவுக்கு வழங்கலாம் என்று முன்மொழிந்து முதன்மை கணக்காளர் நாயகம் (கணக்குகள் மற்றும் உரிமங்கள்) அவர்களுக்கு கடிதம் எழுதினார்.ஆனால் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் கடிதத்தை ஏற்க மறுத்த, கணக்காளர் நாயகம் சுசீலாவுக்கு ஓய்வூதியம் வழங்க முடியாது என கடந்த பிப்ரவரி 2015 ஆம் ஆண்டு பதிலளித்தார். இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சுசீலா வழக்கு தொடர்ந்தார். இம்மனுவை விசாரித்து வந்த உயர்நீதிமன்ற நீதிபதி அரிபரந்தாமன் தீர்ப்பில் கூறியிருப்பதாவது:சுசீலாவுக்கும், ஸ்டான்லிக்கும் இடையே நடைபெற்ற திருமணம் சட்டப்படி செல்லாது என்ற போதிலும், கடந்த 1976 ஆம் ஆண்டு முதல் ஸ்டான்லியுடன் சுசீலா வாழ்ந்து வந்துள்ளார். ஸ்டான்லியின் மரணம் வரை சுசீலா உடன் இருந்துள்ளார். சுகந்திக்கும் விவாகரத்து வழங்கப்பட்டுவிட்டது. ஸ்டான்லியும் தனக்குப்பின் சுசீலாவுக்கு ஓய்வூதியம் வழங்கவேண்டும் என்று பரிந்துரைத்துள்ளார். இதையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல் கணக்காளர் நாயகம் மாவட்ட கண்காணிப்பாளரின் கடிதத்தை ஏற்க மறுத்து, சுசீலாவுக்கு ஓய்வூதியம் வழங்கமுடியாது என்று கூறியுள்ளார்.எனவே கணக்காளர் நாயகத்தின் முடிவை ரத்து செய்து, ஸ்டான்லி இறந்த பின்புள்ள காலத்திற்கான ஒட்டுமொத்த ஓய்வூதிய தொகையையும் 12 வார காலத்திற்குள் சுசீலாவுக்கு வழங்கவேண்டும் என்றும், அதன் பின் சுசீலாவுக்கு வழக்கமாக மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கவேண்டும் இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Superintending Engineers / Electrical, Transfer and Postings orders issued.


TAMILNADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LIMITED
(ABSTRACT)

Establishment  -  TANGEDCO - Class  I Service  -  Superintending  Engineers/Electrical - Transfers and Postings - Orders - Issued.
--------------------------------------------------------------------------------------------------------
 (SECRETARIAT BRANCH)

(Rt.) CMD TANGEDCO Proceedings No.45                        Dated  the  4th  July,  2015
                                                                                   Aani  19,    Manmadha
                                                                                   Thiruvalluvar Aandu-2046.

Chief Engineers/Electrical - Promotion and Transfer and Postings - Orders

TAMILNADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LIMITED
 (ABSTRACT)

Establishment  - TANGEDCO - Class I Service  -   Chief Engineers/Electrical –Promotion and Postings - Orders - Issued.
--------------------------------------------------------------------------------------------------------
(SECRETARIAT BRANCH)


(Per.) CMD TANGEDCO Proceedings No.141                   Dated the  4th  July,  2015    
                                                                                 Aani  19, Manmadha   
                                                                                 Thiruvalluvar Aandu-2046.

கல்விதுறையில் வாரிசு வேலை கோரி 14 ஆண்டுகளாக காத்திருந்தவருக்கு, வேலை வழங்குமாறு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.


மதுரை: வாரிசு வேலை கோரி 14 ஆண்டுகளாக காத்திருந்தவருக்கு, வேலை வழங்குமாறு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் ராம்குமார். இவர் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘எனது தந்தை மீமீசல் அரசு மேனிலைப்பள்ளியில் உதவியாளராக பணியாற்றினார். பணியில் இருந்த போது 19.9.98ல் இறந்தார். இதனால் கருணை அடிப்படையில் எனக்கு வாரிசு வேலை கேட்டு 2000ம் ஆண்டில் என் தாயார் விண்ணப்பித்தார். என்னுடைய மற்றொரு சகோதரருக்கு மெரிட் அடிப்படையில் 2012ல் இடைநிலை ஆசிரியர் பணி கிடைத்தது. இதை காரணம் காட்டி எனக்கு வாரிசு வேலை தர முடியாது என அறந்தாங்கி டிஇஓ மறுத்து 2013ல் உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்து எனக்கு வேலை வழங்க உத்தரவிட வேண்டும்’’ என கூறியிருந்தார். அரசு தரப்பீல் ஆஜரான வக்கீல் முகமது மைதீன், குடும்பத்தில் ஒருவர் அரசுப் பணியில் இருந்தால் வாரிசு வேலை கிடையாது என அரசாணை உள்ளதாக தெரிவித்தார். 

மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன், ‘‘மனுதாரரின் தந்தை இறந்ததும் முறைப்படி உரிய காலத்தில் வாரிசு வேலை கேட்டு விண்ணப்பித்துள்ளனர். எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அந்த விண்ணப்பத்தை நிலுவையில் வைத்துள்ளனர். மற்றொருவருக்கு மெரிட் அடிப்படையில்தான் வேலை கிடைத்துள்ளது. அந்த அடிப்படையில் வேலை வழங்க முடியாது என்பதை ஏற்க முடியாது. மனு செய்தவுடன் அதை பரிசீலித்திருந்தால் அப்போதே வேலை கிடைத்திருக்கும். உரிய காலத்தில் பரிசீலிக்காமல் கிடப்பில் போட்டுவிட்டு தற்போது மறுப்பதை ஏற்க முடியாது. எனவே வேலை வழங்க மறுத்த டிஇஓ உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. 2 மாதத்திற்குள் மனுதாரருக்கு பணி வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என உத்தரவிட்டுள்ளார்.

Chief Engineers / Mechnical, Promotion and Postings orders

TAMILNADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LIMITED
(ABSTRACT)

Establishment - TANGEDCO - Class I Service - Chief Engineers/Mechanical Promotion and Postings - Orders - Issued.
--------------------------------------------------------------------------------------------------------
(SECRETARIAT BRANCH)

(Per.) CMD TANGEDCO Proceedings No.137 Dated the 2nd July, 2015 
Aani 17, Manmadha 
Thiruvalluvar Aandu-2046.

Superintending Engineers / Electrical, Transfer and Postings orders

TAMILNADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LIMITED
(ABSTRACT)

Establishment - TANGEDCO - Class I Service - Superintending Engineer/Electrical Transfer and Posting - Orders - Issued. 
----------------------------------------------------------------------------------------------------------- 
(SECRETARIAT BRANCH)

(Rt.) CMD TANGEDCO Proceedings No.43 Dated the 2nd July, 2015
Aani 17, Manmadha Thiruvalluvar Aandu-2046.

மீட்டர் பழுதான காலத்திற்கான மின் நுகர்வு கணக்கீடு ( Regulation 11(2) & 11(5) )

  மீட்டர் பழுதான காலத்திற்கான மின் நுகர்வு கணக்கீடு TNERC Supply Code – Regulation 11(2) & 11(5) 📌 Regulation 11(2) மீட்டர் பழுதாகி...