AE Recruitment Terms & Condition dt.31.05.19


View Download

13 EE to SE (Elec) Promotion & Posting Orders




Preparation of G.P.F.Statement from Payroll Software Instructions


View Download

3 Senior Personnel Officer Promotion & Posting Orders


View Download

NCES/Tirunelveli Sanction of posts to the 400/230-110 K.V.SS at Thennampatti Orders



AE/JE Elec I Gr /Civil Allotted through Direct Recruitment & Internal Selection Instruction


Gangman (Trainee) Online Application & Payment Extended Notification


View Download

13 SE as ACE Orders


View Download

9 SE to CE (Elec) Promotion and Posting Orders


View Download

Administrative Supervisors - Selected for promotion as Assistant Administrative Officers - Allotment Orders


View Download

Direct Recruitment AE Joining time Undertaking & Physical Fitness Certificate


View Download


View Download


View Download

277 AE Internal Section Allotment Orders


View Download


View Download

300 AE (Elec) Direct Recruitment Orders


View Download

25 AE (Civil) Allotment Orders


View Download


View Download

Direct Recruitment Assistant Engineer Selection & Waiting List Orders



View Download


View Download


View Download


View Download

Waiting List

View Download


View Download


View Download


View Download

Safety Manual for Construction, Operation & Maintenance of Distribution Network


View Download

50-க்கும் மேற்பட்ட பட்டப் படிப்புகள் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல!: அரசாணை வெளியீடு

50-க்கும் மேற்பட்ட பட்டப் படிப்புகள் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல!: அரசாணை வெளியீடு

பல்வேறு எம்.பி.ஏ. படிப்புகள், இரட்டை பட்டப் படிப்புகள் உள்பட 50-க்கும் மேற்பட்ட பட்டப் படிப்புகள் அரசுப் பணிகளுக்கான கல்வித் தகுதிகளாக எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை தமிழக உயர் கல்வித் துறை அண்மையில் பிறப்பித்திருக்கிறது.
தொழில்நுட்ப வளர்ச்சி, தொழில்நிறுவனங்களின் தேவைகளுக்கு ஏற்ப கலை, அறிவியல், மேலாண்மை, பொறியியல்-தொழில்நுட்பம் என அனைத்துத் துறைகளிலும் புதிய படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அறிமுகம் செய்யப்படும் புதிய படிப்புகள், ஏற்கெனவே அந்தந்தத் துறை சார்ந்த மூலப் படிப்புகளின் பாடத் திட்டத்தில் குறைந்தபட்சம் 70 சதவீத பாடங்களைக் கொண்டவையாக இருந்தால் மட்டுமே, அந்தப் புதிய படிப்புகள் அரசுப் பணிக்கான கல்வித் தகுதியாக ஏற்றுக்கொள்ளப்படும்.



70 சதவீதத்துக்கும் குறைவான மூலப் பாடத் திட்டத்தின், பாடங்களைக் கொண்டிருந்தால், அந்தப் புதிய படிப்பு குறிப்பிட்ட அரசுப் பணிக்கான கல்வித் தகுதியாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

இதற்காக, உயர்கல்வித் துறை செயலர், பேராசிரியர்கள், நிபுணர்கள் அடங்கிய பட்டப்படிப்பு இணைக் குழு ஒன்றை அமைத்து, கவனமுடன் ஆய்வு செய்து எந்தெந்தப் படிப்புகள் அரசுப் பணிக்கான கல்வித் தகுதிக்கு இணையானவை அல்லது இணையற்றவை என்ற பட்டியலை அரசாணையாக அவ்வப்போது வெளியிட்டு வரும்.
இந்த அரசாணையின் அடிப்படையிலேயே தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அரசுப் பணிகளுக்கானத் தேர்வை நடத்தும். அந்த வகையில் அண்மையில் நடைபெற்ற இந்த பட்டப் படிப்பு இணைக் குழுவின் 60-ஆவது கூட்டத்தில், பல்வேறு பல்கலைக்கழகங்கள் சார்பில் வழங்கப்படும் பல்வேறு படிப்புகள் அரசுப் பணிகளுக்கான கல்வித் தகுதிக்கு இணையற்றவையாக (அரசாணை எண்.66) அறிவிக்கப்பட்டுள்ளன.

எம்.பி.ஏ. படிப்புகள்: அதன்படி, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சார்பில் வழங்கப்படும் எம்.பி.ஏ. சந்தை மேலாண்மை, எம்.பி.ஏ. சர்வதேச வணிகம், எம்.பி.ஏ. இணைய-வணிகம், எம்.பி.ஏ. மனிதவள மேம்பாடு, எம்.பி.ஏ. உலக மேலாண்மை, ஆன்-லைன் எம்.பி.ஏ., எம்.பி.ஏ. நிதி மேலாண்மை ஆகிய படிப்புகள் அரசு பொதுத் துறை நிறுவன பணிகளுக்கான எம்.பி.ஏ. கல்வித் தகுதிக்கு இணையானவை அல்ல எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது அரசுத் துறைகளில் எம்.பி.ஏ. கல்வித் தகுதிக்கான பணிகளுக்கு இவர்கள் விண்ணப்பிக்க முடியாது.

இரட்டைப் பட்டப் படிப்புகள்: அதேபோல, இந்தப் பல்கலைக்கழகம் சார்பில் வழங்கப்படும் பல்வேறு இரட்டை பட்டப் படிப்புகளும் அரசுப் பணிகளுக்கு தகுதியானவை அல்ல என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சார்பில் வழங்கப்படும் பி.எஸ்சி. கணினி அறிவியல் - பி.எஸ்சி. கணிதம் இரட்டைப் பட்டப் படிப்பு அரசுப் பணிக்கான பி.எஸ்சி. கணினி அறிவியல் படிப்புக்கு இணையானது அல்ல எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தப் பல்கலைக்கழகம் சார்பில் வழங்கப்படும் பி.பி.ஏ. இரட்டைப் பட்டப் படிப்பு , பி.ஏ. சமூகவியல் இரட்டைப் பட்டப் படிப்பு, பி.ஏ. அரசியல் அறிவியல் இரட்டைப் பட்டப் படிப்பு, பி.ஏ. வரலாறு இரட்டைப் பட்டப் படிப்பு, பி.ஏ. ஆங்கிலம் இரட்டைப் பட்டப் படிப்பு, பி.ஏ. பொருளாதாரம் இரட்டைப் பட்டப் படிப்பு, பி.காம். இரட்டைப் பட்டப் படிப்பு, பி.எஸ்சி. காட்சி தகவல் தொடர்பியல் இரட்டைப் பட்டப் படிப்பு, பி.எஸ்சி. புள்ளியியல் இரட்டைப் பட்டப் படிப்பு, பி.எஸ்சி. கணினி அறிவியல் இரட்டைப் பட்டப் படிப்பு ஆகியவை அந்தந்த மூலப் படிப்புகளுக்கு இணையானவை அல்ல எனவும், அரசுப் பணிக்கான கல்வித் தகுதியாக எடுத்துக்கொள்ளப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற படிப்புகள்: பாரதியார் பல்கலைக்கழகம், திருவள்ளுவர் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் சார்பில் வழங்கப்படும் எம்.எஸ்சி. பயன்முறை (அப்ளைடு) நுண்உயிரியல் படிப்பு, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் சார்பில் வழங்கப்படும் எம்.எஸ்சி. ஒருங்கிணைந்த உயிரியல், எம்.எஸ்சி. உயிரியல் படிப்புகள், காந்திகிராம் கிராம நிறுவனம் சார்பில் வழங்கப்படும் எம்.எஸ்சி. பயன்முறை உயிரியல், பாரதிதாசன் பல்கலை. சார்பில் வழங்கப்படும் 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த எம்.எஸ்சி. உயிர் அறிவியல், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சார்பில் வழங்கப்படும் 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த எம்.எஸ்சி. விலங்கியல், எம்.எஸ்சி. கடல்வாழ் நுண் உயிரியல் ஆகிய படிப்புகள் அரசுப் பணிக்கான எம்.எஸ்சி. விலங்கியல் கல்வித் தகுதிக்கு இணையாக எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.
மேலும் பல்வேறு படிப்புகள் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை அனைத்து மாணவர்களும் தெரிந்துகொள்ளும் வகையில், அனைத்துப் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளின் அறிவிப்புப் பலகையில் வெளியிட வேண்டும் என்கின்றனர் கல்வியாளர்கள்.
இதுகுறித்து இந்த பட்டப் படிப்பு இணைக் குழுவின் உறுப்பினராக இடம்பெற்றிருக்கும் சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் துரைசாமி கூறியது:
அவ்வப்போது புதிதாக அறிமுகம் செய்யப்படும் பட்டப் படிப்புகள் அந்தந்த மூலப் படிப்புகளின் பாடத் திட்டத்தில் 70 சதவீத பாடங்களை உள்ளடக்கியதாக இருக்கவேண்டும். அப்போதுதான், அரசுப் பணிக்கான கல்வித் தகுதிக்கு அந்தப் புதிய படிப்புகள் இணையானவையாக எடுத்துக்கொள்ளப்படும்.

அவைத்தான் இந்தப் பட்டியலில் வெளியிடப்பட்டுள்ளது. அதற்காக, இந்தப் படிப்புகளை மேற்கொள்வதால் எந்தவொரு வேலைவாய்ப்புமே கிடைக்காது எனத் தவறாகப் புரிந்துகொள்ளக்கூடாது என்றார் அவர்

ஊட்டி:குந்தாவில் பழங்கால மின் சாதனங்களின் அருங்காட்சியகம்

ஊட்டி:குந்தா மின்வாரிய மேல்முகாமில் பழங்கால மின் சாதனங்கள் சேகரிக்கப்பட்டு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.நீலகிரியில், குந்தா, பைக்காரா நீர் மின் திட்டத்தின் கீழ், 12 மின் நிலையம் மற்றும், 13 அணைகள் உள்ளன. இங்குள்ள மின்நிலையம், அணை கட்டப்பட்டு, 70 ஆண்டுக்கு மேலாகிவிட்டது.அந்த கால கட்டங்களில் பயன்படுத்திய மின் கருவிகள், மோட்டார், புரஜெக்டர், டெலிபோன், எனர்ஜி மீட்டர், அன்றைய மருத்துவ உபகரணங்கள், டனல், மின் நிலையம் மற்றும் அணை கட்டுமான பணிகளின் புகைப்படங்கள், டிரான்ஸ்பார்மர்கள், பிரேக்கர் உள்ளிட்ட பல்வேறு மின் சாதனங்கள் குந்தாவுக்கு கொண்டு வரப்பட்டன. அங்குள்ள அலுவலகம் மற்றும் திறந்தவெளியில் அருங்காட்சிய கம் அமைக்கப்பட்டது.கோடை சீசனையொட்டி, மஞ்சூருக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் பார்வையிட, குந்தா மின்வாரியம் சார்பில் இதற்கான ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த அருங்காட்சியகத்தை மின்வாரிய தலைவர் விக்ரம்கபூர் திறந்து வைத்தார். பின், நிருபர்களிடம் கூறுகையில், ''கடந்த பல ஆண்டுக்கு முன்பு பயன்படுத்திய அரிய மின்சாதனங்கள் சேகரிக்கப்பட்டு, அருங்காட்சியம் அமைக்கப்பட்டுள்ளது.இதன்மூலம் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு பயனளிப்பதாக உள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகளும் பார்வையிட்டு தெரிந்துகொள்ளலாம்,'' என்றார்.இங்கு திறக்கப்பட்ட அருங்காட்சியகத்தை சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் பார்வையிட்டு செல்கின்றனர். குந்தா மேற்பார்வை செயற்பொறியாளர் ரகு, மின்வாரிய பொறியாளர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர்

மின் வாரிய இணையதள சேவைக்கு இனி சொந்த தொலைதொடர்பு வசதி

அனைத்து அலுவலகங்கள் இடையில், கம்ப்யூட்டர் வாயிலாக பெறப்படும், தகவல் பரிமாற்ற சேவைகளுக்கு, இனி, சொந்த தொலைதொடர்பு வசதியை பயன்படுத்த, தமிழக மின் வாரியம் முடிவு செய்துள்ளது.

மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரம், மின் கோபுர வழித்தடங்கள் வாயிலாக, பல பகுதிகளுக்கு எடுத்து செல்லப்படுகிறது. அதன்படி, அந்த கோபுரத்தில், மூன்று கம்பியில் மின்சாரம் செல்கிறது.அதன் மேல், 'எர்த் ஒயர்' செல்கிறது. இது, இடி, மின்னலின் போது, மின் கம்பியை பாதுகாக்கிறது. அதிக திறன் உள்ள, மின் கோபுர வழித்தடத்தில், 'எர்த் ஒயருக்கு' பதில், 'பைபர் ஆப்டிக் கிரவுண்ட் ஒயர்' என்ற, தொலைதொடர்புக்கு உதவும், 'கேபிள்' அமைக்கப்படுகிறது.

அந்த கேபிள், எர்த் ஒயராக செயல்படுவதுடன், தகவல் பரிமாற்ற சேவைகளுக்கும் பயன் படுகிறது.தகவல் பரிமாற்றம்இதன் வாயிலாக, மின் நிலையங்கள்; துணை மின் நிலையங்கள் இடையில், அதிகாரிகள், தொலைபேசியில் பேசுவதுடன், கம்ப்யூட்டரில், தகவல் பரிமாற்றங் களையும் மேற்கொள்கின்றனர்.

தற்போது, அந்த சேவையை, தலைமை அலுவலகம் முதல் பிரிவு அலுவலகம் வரை, கம்ப்யூட்டரில் பெறப்படும், தகவல் பரிமாற்ற சேவைகளுக்கும் பயன்படுத்த, மின் வாரியம் முடிவு செய்துள்ளது.இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:தமிழகத்தில், ஒன்பது மண்டலம், 42 மின் பகிர்மான வட்டங்கள், 3,000 பிரிவு அலுவலகங்கள் உள்ளன. இந்த அலுவலகங்கள் இடையே, இணையதளம் வாயிலாக, மின் கட்டணம், உபகரணங்கள் இருப்பு, ஊழியர்கள் விபரம் போன்ற தகவல் பரிமாற்றங்கள், பொது அல்லது தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் வாயிலாக மேற்கொள்ளப்படுகின்றன.
இதற்காக, ஒரு அலுவலகத்திற்கு, மாதம் குறைந்தது, 1,000 ரூபாய் வரை செலவாகிறது. ஆண்டுக்கு, பல லட்சம் ரூபாய் செலவாகிறது. இந்த செலவை தவிர்க்க, சொந்த தொலைத் தொடர்பு வசதி பயன்படுத்தப்பட உள்ளது.புதிய திட்டம்தற்போது, பைபர் ஆப்டிக் இணைப்பில் உள்ள, துணை மின் நிலையங்கள், அதன் அருகில் உள்ள, மின் வாரிய அலுவலகம் வரை, 'கேபிள்' அமைக்கப்பட்டு இணைக்கப்படும்.

இதனால், அந்த அலுவலகங்களிலும், சொந்த தொலைத்தொடர்பு சேவை கிடைக்கும். இதன் வாயிலாக, தொலைத்தொடர்பு சேவைக்கு, மற்ற நிறுவனங்களை சார்ந்திருக்க தேவையில்லை. அதற்காக செலவழிக்கும் நிதியில், புதிய திட்டங்களை மேற்கொள்ளலாம்.

Card Billing staff working hour

 Card Billing staff working hour     Click