Showing posts with label தீக்கதிர். Show all posts
Showing posts with label தீக்கதிர். Show all posts

மின் ஊழியர்களுக்கு 1.12.2015 முதல் புதிய ஊதிய உயர்வு வழங்க பேச்சு வார்த்தைக் குழுவை அமைத்திட முன்வர வேண்டும், 2014 மின்சார திருத்த மசோதாவை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றவேண்டும் கே. பாலபாரதி வலியுறுத்தல்


2014 மின்சார திருத்த மசோதாவை எதிர்த்து தீர்மானம்  கே. பாலபாரதி வலியுறுத்தல்

சென்னை, செ ப்.25
2014 மின்சார திருத்த மசோதாவை அதிமுகவும் எதிர்ப்பதால் அதை எதிர்த்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றவேண்டும் என்று சட்டப்பேரவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் உறுப்பினர் பாலபாரதி வலியுறுத்தினார்.வெள்ளியன்று (செப். 25) மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மானியக்கோரிக்கைகள் மீதான விவாதத்தில் அவர் பங்கேற்று பேசியது வரு மாறு:தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 1.12.2015 முதல் புதிய ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும். அதற்கான பேச்சு வார்த்தைக் குழுவை அமைத்திட முன்வர வேண்டும். இத்துறையில் 20ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளன. கள உதவி யாளர், கம்பியாளர், இளநிலை உதவியாளர், நிர்வாகம், கணக்கு - தணிக்கை என 20,000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளன. தொழில்கல்வி முடித்த சுமார் 20ஆயிரம் இளைஞர்கள் தமிழ்நாட்டில் வேலைக்காக காத்திருக்கிறார்கள்.
அவர்களை வைத்து இந்த காலிப்பணியிடங்களை நிரப்புவதன் மூலமாக வேலைவாய்ப்பு கிடைக்கும். இதே துறையில் ஒப்பந்த முறையில் பணியாற்றி வரும் தொழி லாளர்களும் அதே கல்வித்தகுதியோடு வேலை செய்து வருகிறார்கள். அவர்களில் 12 ஆயிரம் பேரையும் இந்த காலிப்பணியிடங்களில் நிரப்பவேண்டும். இதன் மூலம் அவர்களுக்கும் நிரந்தரவேலை கிடைக்கும். வாரி யம் வழங்கக் கூறிய குறைந்தபட்ச கூலியை கொடுக்க வேண்டும்.
மின்வாரிய விபத்துக்கள்
தரமற்ற தளவாடச் சாமான்களை பயன்படுத்துவதால் மின்வாரியத்தில் பல நேரங்களில் விபத்துகள் ஏற்பட்டு ஊழியர்கள் பலியாகின்றனர். எனவே தரமான தளவாடச் சாமான்களை கொள்முதல் செய்வதற்கும் பயன்படுத்துவதற்கும் அரசு முன்வரவேண்டும். விபத்துகளை தவிர்க்க பணிச் சுமையை குறைக்க வேண்டும்.

இணையதளம் மூலம் விண்ணப்பித்து, புதிய மின் இணைப்பு பெறும் திட்டத்தை, முதல்வர் ஜெயலலிதா விரைவில் துவக்கி வைக்கிறார்.

இணையதளம் மூலம் விண்ணப்பித்து, அலைச்சல் இல்லாமல், சுலபமாக புதிய மின் இணைப்பு பெறும் திட்டத்தை, முதல்வர் ஜெயலலிதா விரைவில் துவக்கி வைக்கிறார். 

தமிழகத்தில், பிறப்பு, இறப்பு, வருமானம், சாதி சான்றிதழ் மற்றும் கடை துவக்குவதற்கான அனுமதி போன்றவற்றை பெற, இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் வசதி உள்ளது. இதன் மூலம், மக்கள் அலைச்சல் இல்லாமல், தங்களுக்கு வேண்டிய ஆவணங்களை, உரிய கட்டணம் மட்டும் செலுத்தி, சுலபமாக பெறுகின்றனர். ஆனால், புதிய மின் இணைப்பு பெற வேண்டும் எனில், தமிழ்நாடு மின் வாரியத்திடம், விண்ணப்பம் அளிக்க வேண்டும். 

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய உத்தரவுப்படி, விண்ணப்பம் வழங்கிய, 30 நாட்களுக்கு, புதிய மின் இணைப்பு வழங்க வேண்டும். அப்பகுதியில் டிரான்ஸ்பார்மர் பொருத்த வேண்டும் எனில், 90 நாட்களுக்குள் வழங்க வேண்டும். ஆனால், விண்ணப்பித்து, பல நாட்கள் ஆகியும், மின் இணைப்பு வழங்காமல், மின் வாரிய ஊழியர்கள் அலைக்கழிப்பதாகவும், லஞ்சம் வாங்கிய பின்னரே, மின் இணைப்பு வழங்குவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, புதிய மின் இணைப்பிற்கு,

இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் 
திட்டத்தை செயல்படுத்த, மின் வாரிய அதிகாரிகள் முடிவு செய்தனர். தற்போது, இதற்கான மென்பொருள் தயாரிக்கும் பணி முடிவடைந்துள்ளது. எனவே, விரைவில், இந்தத் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைக்க உள்ளார்.



தீபாவளி பரிசு இது:

எரிசக்தி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:மின் வாரிய பிரிவு 
அலுவலகத்தில், புதிய மின் இணைப்பிற்கான விண்ணப்பத்தை கொடுத்தால் அதை வரிசைப்படுத்தி, அந்த வரிசையின் அடிப்படையில், மின் இணைப்பு வழங்க வேண்டும். ஆனால் 

ஊழியர்கள், தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டும், மின் இணைப்பு தருவதாக புகார் வந்தது. அதனால், இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது. இத்திட்டத்தை, மின் நுகர் வோருக்கு, தீபாவளி பரிசாக, முதல்வர் ஜெயலலிதா விரைவில் துவக்கி வைப்பார். இவ்வாறு அவர் கூறினார். 


என்ன பயன்?

இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் போது, தேதி, நேரம், வரிசை எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் கம்ப்யூட்டரில் பதிவாகும். இதில், நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும். குறிப்பிட்ட தினங்களுக்குள், மின் இணைப்பு பெற முடியும். தாமதமானால், அதற்கு யார் காரணம் என தெரிந்து கொள்ள முடியும். மின் கட்டணத்தை இணைய தளம் மூலம் செலுத்தும் திட்டம், ஏற்கனவே துவக்கப்பட்டு உள்ளது. இதனால், மின் நுகர்வோர் பலர், கட்டண மையங்களுக்கு சென்று, வரிசையில் காத்திருக்காமல், கூட்ட நெரிசலில் சிக்காமல், தங்களது வீட்டில் அல்லது அலுவலகத்தில் இருந்தபடியே, மின் கட்டணத்தை செலுத்தி வருகின்றனர். 

- நமது நிருபர் -

தீக்கதிர் செய்தி நெய்வேலி ஒப்பந்தத் தொழிலாளர்கள் போராட்டமும் - உச்சநீதிமன்ற தீர்ப்பும்

தீக்கதிர் செய்தி நெய்வேலி ஒப்பந்தத் தொழிலாளர்கள் போராட்டமும் - உச்சநீதிமன்ற தீர்ப்பும் ஜி. சுகுமாறன் -------------------  நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பணியாற்றும் 10632 க்கும் மேற்பட்ட ஒப் பந்தத் தொழிலாளர்களை சீனியாரிட்டி அடிப் படையில் பணிநிரந்தரம் செய்யவேண்டும் என்கிற உச்ச நீதிமன்ற தீர்ப்பு நெய்வேலி ஒப் பந்த தொழிலாளர்களின் வாழ்வில் ஒளி ஏற்றியுள்ளது. பெரும் நம்பிக்கையுடன் உள் ளனர். இந்நிலையில் தீர்ப்பின் அம்சங்க ளையும், கடந்த கால போராட்டங்களையும் நினைவு கூருவது அவசியம்.1989-ல் என்.எல்.சி. நிறுவனத்தில் பேச்சுவார்த்தையில் இருந்த ஐந்து சங்கங் களும் தொழிலாளர்களுக்கு துரோக ஒப்பந் தத்தை போட முயற்சித்தனர். அன்றைய தினம் சிஐடியு, எச்.எம்.எஸ் இரண்டு சங் கங்கள் எங்களையும் பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என தொடர் போராட் டத்தில் ஈடுபட்டனர்.