Showing posts with label INCOME TAX. Show all posts
Showing posts with label INCOME TAX. Show all posts

5 லட்சம் ரூபாய்க்குமேல் இருந்தால், அவர் வரிக் கணக்கை எலெக்ட்ரானிக் முறையில் (இ-ஃபைலிங்) தாக்கல் செய்ய வேண்டியது கட்டாயம்

Thanks to-சி.சரவணன்

மாதச் சம்பளக்காரர் கள் முடிந்த 2013-14-ம் நிதியாண்டுக்கானவருமான வரிக் கணக்கு (இன்கம் டாக்ஸ் ரிட்டர்ன்) விவரத்தைதாக்கல் செய்யகடைசி நாள் ஜூலை 31, 2014.இதற்கு இன்னும் 11 நாட்கள்தான் இருக்கின்றன. கடைசி வாரத்தில்ரிட்டர்ன் தாக்கல் செய்துகொள்ளலாம் என்று ருந்துவிட்டு,அவசரமாக வரிக் கணக்கு தாக்கல் செய்யும்போது தவறுகள்ஏற்படக்கூடும். இதைத் தவிர்க்க இப்போதே களமிறங்கிவிடுங்கள்.

வருமான வரிக் கணக்கை எப்படி தாக்கல் செய்ய வேண்டும், எந்தமாதிரியான விஷயங்களையெல்லாம் கவனிக்க வேண்டும் எனசென்னையைச் சேர்ந்த ஆடிட்டர் கோபால் கிருஷ்ண ராஜுவிடம்கேட்டோம். அவர் விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

வருமான வரி உச்சவரம்பு ரூ. 2.5 லட்சமாக உயர்வு

நடப்பு ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையினை தாக்கல் செய்து பேசிவரும் அருண் ஜேட்லி, வருமான வரி செலுத்தும் சிறிய, நடுத்தர, மூத்த குடிமக்களுக்கான வருமான வரி வரம்பில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது என்பதைத் தெரிவித்தார்.


*வருமான வரி வரம்பு ரூ.2 லட்சம் என்பதில் இருந்து, ரூ.2.5 லட்சமாக உயர்த்தப் படுவதாகக்கூறினார் அருண் ஜேட்லி. 

*80(சி) பிரிவின் கீழ் முதலீட்டிற்கான வரம்பு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

*வீட்டுக் கடனுக்கான வரிச் சலுகை ரூ.1.5 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்வு.

*மூத்த குடிமக்களுக்கு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

வருமான வரியை சேமிப்பது எப்படி?

 வருமான வரிப்பிரிவில் 80C பிரிவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. இந்த பிரிவில், நாம் ஒரு லட்சம் ரூபாய்வரை சேமிக்க முடியும். நாம் சேமிக்க எடுத்துக்கொள்ளும் கால அவகாசம் ஒரு நிதியாண்டில் ஏப்ரல் 1 முதல் அடுத்த வருடம் 31 மார்ச் வரை. ஆனால் நம்மில் பலர் 10 அல்லது 11 மாதம் எந்தவித முயற்சியும் எடுக்காமல், கடைசி இரண்டு மாதங்களில் அந்த சமயம் கண்ணில் யார் படுகிறாரோ அவரிடம் எதையாவது வாங்கி அலுவலகத்தில் ரசீது கொடுப்பதையே பெரிய விஷயமாக நினைக்கிறார்கள்.
               பின்பு அதைச் சொன்னார், இதைச் சொன்னார் என்று முகவரைக் குறை கூறுவதுண்டு. 80 சி பிரிவில் எந்தெந்த முதலீடுகள் உள்ளன, அவற்றின் பயன் என்னவென்று தெரிந்தால் நாம் அதை சரியாக பயன்படுத்திக்கொள்ளமுடியும்.

1. வருங்கால வைப்பு நிதி (பி.எஃப்) இது நம்முடைய வருமானத்தில் நாம் வேலை செய்யும் நிறுவனத்தால் பிடிக்கப்படுவது. நம்முடைய அடிப்படை சம்பளத்தில் 12% பிடிக்கப்பட்டு, அதற்கு 8.75% வட்டி வழங்குகிறார்கள். இது ஒரு நீண்ட கால சேமிப்பு, நாம் அறியாமலேயே சேமிப்பது. இதில் நாம் விரும்பினால் 12% க்கும் மேலே சேர்க்கலாம். ஒரு லட்சம்வரை இதில் சேமிக்க முடியும்.