Showing posts with label TNERC. Show all posts
Showing posts with label TNERC. Show all posts

MD regularaise - FC shortfall போடக்கூடாது என்பதற்கான TNERC AMENDEMENT

 MD regularaise மட்டும்தான் செய்ய வேண்டும்  FC shortfall போடக்கூடாது என்பதற்கான TNERC AMENDEMENT

ஆரம்பத்திலிருந்தே TF6 தவிர (முந்தைய 6 மாதம் மட்டும்தான்)மற்ற வீதப்படிக்கு FC Shortfall இல்லை

இந்த 4/18 உத்தரவுபடி TF 6க்கு முந்தைய ஆறுமாதம் என்பதும் நீக்கப்பட்டுவிட்டது.

Penalty தானாக போட்டு விடும்.

MD regularaise மட்டும்தான் செய்ய வேண்டும் 

MD regularaise போடக்கூடாது


CLICK VIEW PAGE 127 ( 29 )  TNERC AMENDEMENT 


யாராவது SF போட்டு அனுப்பினால் இந்த பக்கத்தை இணைத்து Withdrawal எழுதலாம்.


நன்றி வாட்சப் நண்பர்கள்.

விவசாய மின் இணைப்பு இடமாற்றம் TNERC புதிய உத்தரவு - 2020 அரசிதழில் வெளியீடு

 Agriculture Amendment.pdf

View Download

மின்சார ஒழுங்குமுறை ஆணைய உத்தரவுப்படிவிவசாய மின் இணைப்பு பெறுவதற்கான  நடைமுறையில் மாற்றம்தமிழக அரசு நடவடிக்கை
சென்னை, செப்.9-
மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவுப்படி விவசாய மின் இணைப்பை  பெறுவதற்கான நடைமுறையில் மாற்றங்களை செய்து தமிழக அரசு நடவடிக்கை  மேற்கொண்டுள்ளது.
விவசாய மின் இணைப்பு
தமிழகத்தில் விவசாய மின் இணைப்பு பெறுவதில் ஏராளமான நடைமுறை  சிக்கல்கள் இருந்தன. ஒவ்வொரு மின் இணைப்புக்கும் பல்வேறு ஆவணம், ஒப்புதல்  என விவசாயிகள் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வந்த நிலையில் அவற்றையெல்லாம்  சரி செய்து தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர்  எம்.சந்திரசேகர், உறுப்பினர்களான டி.பிரபாகரராவ், ஓய்வு பெற்ற நீதிபதி  கே.வெங்கடசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு தமிழக அரசுக்கு உத்தரவு  பிறப்பித்தது.
உறுதிமொழி பத்திரம்
அதன் விவரம் வருமாறு:-
மின் இணைப்பு கோரும் விவசாயியின் கிணற்றில் கூட்டு சொந்தக்காரர்  இருப்பின் கூட்டு சொந்தக்காரர் ஒப்புதல் கொடுத்தால் மட்டுமே விண்ணப்பம்  ஏற்றுக் கொள்ளப்படும் என்ற நிலை உள்ளது. இதனால் பல விவசாயிகள்  விவசாயத்துக்கான மின் இணைப்பு கேட்டு விண்ணப்பிக்க முடியாமல் துயரப்பட்டு  வருகின்றனர். இதுபோன்ற நிலையில் இருக்கும் விண்ணப்பதாரர் உறுதிமொழி  பத்திரம் இணைத்தால் விண்ணப்பம் பதிவு செய்ய ஏற்றுக் கொள்ளப்படும். ஒரே  சர்வே நம்பரில் அல்லது உட்பிரிவு சர்வே நம்பரில் ஒருவருக்கு 2 கிணறுகள்  இருக்கும் பட்சத்தில் அவர் பெயரில் ஒவ்வொரு கிணற்றுக்கும் தனித்தனி மின்  இணைப்பு அனுமதிக்கப்படும்.
ஆனால், குறைந்தது ஒவ்வொரு கிணற்றுக்கும் ½ ஏக்கர் நிலம் இருக்க  வேண்டும். விவசாய மின் இணைப்பு இடமாற்றம் தமிழ்நாட்டின் எந்த பகுதிக்கும்  அனுமதிக்கப்படும். மின் இணைப்பை இடமாற்றம் செய்ய ஆகும் செலவை விண்ணப்பதாரர்  ஏற்க வேண்டும். இட மாற்றத்துக்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்பட வேண்டிய  அவசியம் இல்லை. ஒருவருக்கு மட்டும் சொந்தமான கிணற்றில் அவரது பெயரில் உள்ள  மின் இணைப்பை வேறு இடத்தில் உள்ள அவருக்கு மட்டும் சொந்தமான கிணற்றுக்கு  அல்லது கூட்டாக சொந்தமான கிணற்றுக்கு மாற்றம் செய்து கொள்ளலாம்.
3 நாட்களுக்குள் மின் இணைப்பு
கூட்டாக சொந்தமான கிணற்றில் ஒருவர் பெயரில் உள்ள மின் இணைப்பை  வேறு இடத்துக்கு அவருக்கு மட்டும் அல்லது கூட்டாக சொந்தமான கிணற்றுக்கு  மாற்றம் செய்து கொள்ளலாம். இதற்கு மின் இணைப்பு உள்ள கிணற்றின் கூட்டாளிகள்  பெயரில் மின் இணைப்புகள் இருக்க வேண்டும் அல்லது கூட்டாளிகள் ஒப்புதல் பெற  வேண்டும். விவசாய மின் இணைப்பு பெற அவசியமற்ற பல சான்றுகள்  கேட்கப்படுகின்றன. கிணறு மற்றும் நிலம் ஆகியவற்றின் உரிமை சான்றை கிராம  நிர்வாக அலுவலரிடம் பெற்று விண்ணப்பத்துடன் இணைத்தால் போதுமானதாகும்.
வேறு எந்தவிதமான உரிமை சான்றுகளும் அவசியம் இல்லை. குறைந்தது ½  ஏக்கர் நிலம் இருக்க வேண்டும். மின் இணைப்புக்கு அனுமதி அளிக்கும்  பட்சத்தில் மின்மோட்டார் பொருத்துதல் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் முடித்து  மின் இணைப்பு பெற தயாராக இருப்பதாக விவசாயி தெரியப்படுத்திய நாளில்  இருந்து 3 நாட்களுக்குள் மின் இணைப்பு தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை தமிழக அரசு முழுமையாக ஏற்றுக்கொண்டு அதனை செயல்படுத்தும் வகையில் அரசிதழில் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

Petition for implementation of the KUSUM (Component C) Agricultural Solar Pump Scheme in 20,000 pump sets by installing 11 kW solar PV plant in each of the pump sets in Tamil Nadu and approval of benchmark tariff.

 KUSUM scheme.pdf

View Download

Supply code 14 ன் படி மின்கணக்கீடு நுகர்வோர் இருப்பிடம் சென்று கணக்கீடு எடுக்கப்பட்டு கணக்கீட்டு தேதி காலக்கெடு ஆகியவை நுகர்வோரின் வெள்ளை அட்டையில் குறிக்கபடவேண்டும். AMR மீட்டர் மாட்டியபிறகு (smart meter) கணக்கீடு செய்ய நுகர்வோர இருப்பிடத்திற்கு செல்ல தேவையில்லை ) அப்போது மின்கட்டண விபரங்கள் மற்றும் காலக்கெடு ஆகிய அனைத்தும் மின்னனு தகவல் / SMS/E mail /மூலம் தெரிவிக்கப்படும்.* இது சம்மமந்தமாக கருத்துக்களை சமர்பிக்க 13-5-20 கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

View Download

Supply code 14 ன் படி மின்கணக்கீடு நுகர்வோர் இருப்பிடம் சென்று கணக்கீடு  எடுக்கப்பட்டு கணக்கீட்டு தேதி காலக்கெடு ஆகியவை நுகர்வோரின் வெள்ளை அட்டையில் குறிக்கபடவேண்டும்.

ஆனால் தற்போது மின் நுகர்வோர்களுக்கு  AMR மீட்டரை  (smart meter) மாற்றும் போது , அந்த மீட்டரின் அனைத்து கணக்கீட்டு விபரங்களும் வாரிய சர்வருக்கு வந்து விடும். (கணக்கீடு செய்ய நுகர்வோர இருப்பிடத்திற்கு செல்ல தேவையில்லை ) அப்போது மின்கட்டண விபரங்கள் மற்றும்  காலக்கெடு ஆகிய அனைத்தும் மின்னனு தகவல் / SMS/E mail /மூலம் தெரிவிக்கப்படும்.

அதுவே நுகர்வோருக்கு தெரிவிக்கும் அறிக்கையாகும் என்ற ஷரத்து சேரக்கப்பட உள்ளது.

இது சம்மமந்தமாக கருத்துக்களை சமர்பிக்க 13-5-20 கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக தங்களது கருத்துக்கள் இருந்தால் தெரிவிக்கவும்.


விவசாய மின் இணைப்பை, எங்கு வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளும் வசதியை வழங்குவது தொடர்பாக, தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம், வரைவு அறிக்கை வெளியிட்டு, மக்களிடம் கருத்து கேட்டுள்ளது

விவசாய மின் இணைப்பில் மாற்றம் மக்களிடம் ஆணையம் கருத்து கேட்பு
*******************
Notification No. TNERC/DC/ 8- /dated .03.2020 


View Download
------------------------
விவசாய மின் இணைப்பை, எங்கு வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளும் வசதியை வழங்குவது தொடர்பாக, தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம், வரைவு அறிக்கை வெளியிட்டு, மக்களிடம் கருத்து கேட்டுள்ளது.
தமிழக மின் வாரியம், விவசாயத்திற்கு இலவசமாக மின் வினியோகம் செய்கிறது. மின் வினியோகம் தொடர்பாக, மின் வாரியம் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளை, ஒழுங்குமுறை ஆணையம் வெளியிடுகிறது.தற்போது, விவசாய மின் இணைப்பு பெற்றுள்ளவர்கள், வேறு இடங்களுக்கு மாற்ற விரும்பினால், புதிதாக விண்ணப்பிக்க வேண்டும். விவசாயத்திற்கு பெற்ற மின்சாரத்தை, வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்தக் கூடாது என, பல வழிமுறைகள் உள்ளன.
அவற்றில், மாற்றங்களை செய்ய, ஆணையம் முடிவு செய்துள்ளது.l அதன்படி, தமிழகத்திற்குள், விவசாய மின் இணைப்பை, எங்கு வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்; இதற்கு ஏற்படும் செலவை, நுகர்வோர் ஏற்க வேண்டும்; மின் இணைப்பு பெற்ற, ஓராண்டிற்கு பின் தான் மாற்ற முடியும்l விவசாய மின்சாரத்தை தண்ணீர் இறைக்க மட்டுமின்றி, விவசாயம் சார்ந்த தொழிலுக்கும் பயன்படுத்தலாம்.
ஒரே சமயத்தில், இரு பயன்பாட்டிற்கும் பயன்படுத்தக் கூடாது l விவசாய மின் இணைப்பு பெற, கிணற்றுடன், 0.5 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும்l மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்தவருக்கு, மின் வாரியம் ஒப்புதல் கடிதம் வழங்கிய நிலையில், ஐந்து ஆண்டுகள் வரை விண்ணப்பம் உயிர்ப்புடன் இருக்கும்l மின் வாரியம் ஒப்புதல் வழங்கிய நிலையில், மின் இணைப்பு பெறுவதற்கு முன் அல்லது மின் இணைப்பு பெற்ற பின், மின் நுகர்வோரின் பெயரை மாற்றலாம்.
இந்த புதிய வழிமுறைகளை ஏற்படுத்த, அவை தொடர்பான வரைவு அறிக்கையை, ஆணையம் தற்போது வெளியிட்டுள்ளது. அவற்றின் மீது, ஏப்ரல், 6ம் தேதி வரை, கருத்துக்கள், ஆலோசனை மற்றும் எதிர்ப்புகளை தெரிவிக்கலாம் என்றும், ஆணையம் தெரிவித்துள்ளது.
Source: dinamalar.

2014 TNERC Supply Code Amendment SC 7/35,SC 7/36


RegulationDateCode/ Amendment NoSubjectDownloadTamilGazetteNo.GazetteNo.







03-06-2014SC 7/35Amendment2425-06-2014
01-07-2014SC 7/36Amendment to Supply Code-Regulation4,5,7,15 & 273006-08-2014

மின்கட்டணம் உயர்த்துவது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் 3 இடங்களில் நடத்த திட்டம்




சென்னை: தமிழகத்தில் மின்கட்டணம் உயர்த்துவது தொடர்பாக பொது மக்களின் கருத்து கேட்பு கூட்டம், 3 இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை பாரி முனையில் உள்ள ராஜ அண்ணாமலை மன்றத்தில் வரும் 24-ம் தேதியும் திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் உள்ள பிரான்ஸ்சிஸ் சேவியியர் பொறியியல் கல்லூரில் 28-ம் தேதியும் கூட்டம் நடைபெறுகிறது. ஈரோடு வ.உ.சி. பூங்கா அருகில் உள்ள மல்லிகை அரங்கில் 31-ம் தேதியும் மூன்றாம் கூட்டம் நடத்த தமிழகஅரசு திட்டமிட்டுள்ளது. கூட்டத்தில் பங்கேற்பவர்கள் காலை 9.30 மணிக்கே வந்து அரங்கத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மின்துறையில் 6854 கோடி ரூபாய் அளவிற்கு பற்றாகுறை ஏற்பட்டுள்ளதாக மின்சாரம் ஒழுங்கு முறை ஆணையம் தெரிவித்திருந்தது. 

இதை சமாளிக்க மின்கண்டனத்தை உயர்த்த அந்த ஆணையம் பரிந்துரைத்துள்ளதை அடுத்து 100 யூனிட் வரை பயன்படுத்தும் வீடுகளுக்காண கட்டணம் யூனிட் 1-க்கு உத்தேசமாக 40 காசுகல் உயர்த்தப்படலாம் என்று தெரிகிறது. மேலும் 201 முதல் 500 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு யூனிட்டுக்கு 60 காசுகளும் 500 யூனிட் மேல் பயன்படுத்துவோருக்கு யூனிட்டுக்கு 85 காசுகளும் உயர்த்தவும் மின்சார ஓழுங்கு முறை ஆணையம் தமிழக அரசுக்கு பரிந்துரைத்துயிருந்தது குறிப்பிடத்தக்கது.

#மின் கட்டண உயர்வு தொடர்பான தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் பொது அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் மின்சார கட்டணம் உயர்கிறது. இதற்கான உத்தேச மின்கட்டணத்தை தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் வெளியிட்டுள்ளது. அதேநேரத்தில் மின்கட்டணத்தை ஒழுங்கு முறை ஆணையம் எப்படி நிர்ணயித்தாலும் மானியம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
நிலக்கரி விலை உயர்வு, ஊழியர்கள் சம்பளம், ஒய்வூதியம் உயர்வால் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இதற்கான, 2013-14ம் ஆண்டிற்கான உத்தேச மின்கட்டணத்தை ஒழுங்கு முறை ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன்படி, யூனிட்டுக்கு 40 முதல் 85 காசுகள் உயர்த்த்தப்படுகிறது. 50 முதல் 100 யூனிட்கள் வரை 40 காசுகள் <உயர்கிறது. 100 முதல் 200 யூனிட்கள் வரை 45 காசுகள் உயர்த்தப்படுகிறது. 201 முதல் 500 யூனிட்கள் வரை 60 காசுகள் உயர்கிறது. 501 யூனிட்களுக்கு மேல் 85 காசுகள் உயர்கிறது. நிலையான மின்கட்டணம் ரூ.10 உயர்கிறது. இது தொடர்பாக ஒழுங்கு முறை ஆணையம் வெளியிட்டுள்ள செய்தியில். நுகர்வோர் பொஐமக்கள் கருத்து கேட்டபின் மின்கட்டணம் குறித்த இறுதி அறிக்கை வெளியிடப்படும். வரும் 26ம் தேதி வரை பொது மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
மானியம்- தமிழக அரசு அறிவிப்பு: இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட செய்தியில், மின்கட்டணத்தை ஒழுங்கு முறை ஆணையம் எப்படி நிர்ணயித்தாலும் அதற்கான மானியத்தை தமிழக அரசு வழங்கும். ஏழை எளிய மக்கள் பாதிக்காத வகையில் மானியம்வழங்கப்படும். கூடுதல் மானியத்தை மின்வாரியத்திற்க வழங்குவதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. மின்வாரியத்தை சீர்திருத்த தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. பூதிய பூனிட்கள் மூலம் , இந்த நிதியாண்டின் இறுதிக்குள் 2,206 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் என கூறியுள்ளார்.

Thanks  to dinamalar


பொது அறிவிப்பை தமிழில் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
 1

Tamil Nadu Electricity Regulatory Commission
No 19A, Rukmini Lakshmipathy Salai, Egmore, Chennai - 600 008.
Phone:044-28411376, Website:http://www.tnerc.tn.nic.in/

Public Notice

1.      The Tamil Nadu Generation and Distribution Corporation Ltd. (TANGEDCO) had last year filed its application before the Commission for final true-up and approval of Aggregate Revenue Requirement (ARR) for the year 2010-11, provisional true-up and approval of ARR for the year 2011-12, Annual Performance Review (APR) for the year 2012-13 based on estimates and its Multi Year Tariff petition for 2013-14 to 2015-16 along with tariff revision for 2013-14. Based on this petition and after considering views of the State Advisory Committee, the public and other stakeholders, Tamil Nadu

விவசாய மின் இணைப்பில் மாற்றம் கொண்டுவர முடிவு

தமிழகத்தில், விவசாய மின் இணைப்பு வழங்குவது தொடர்பான சட்ட விதிகளில், திருத்தம் கொண்டு வர, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் முடிவு செய்துள்ளது.

புதிய விதிகளின்படி, விவசாய மின் இணைப்பு பெற விரும்புவோர், கிணறு மற்றும் ஆழ்துளை கிணறு அமைப்பதற்கு முன், மின் இணைப்பு கோரி விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பங்கள், வரிசைப்படுத்தப்பட்டு, முன்னுரிமை அடிப்படையில், விண்ணப்ப தாரர்களுக்கு, புதிய மின் இணைப்பு வழங்கப்படும். முன்னுரிமை விவரங்கள், கோட்ட அளவில் பராமரிக்கப்படும். ஒரு நிலத்திற்கு, ஒரு மின் இணைப்பு பெறப்பட்டு, நிலம் பங்கீடு செய்யப்படும் போது, அரை ஏக்கருக்கு மேல் இருந்தால், புதிய மின் இணைப்பு பெற்று கொள்ளலாம். இதுபோன்ற பல்வேறு திருத்தங்கள் கொண்டு வருவதற்கான வரைவு அறிக்கை, மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. திருத்தம் தொடர்பான கருத்து, ஆலோசனை மற்றும் ஆட்சேபனை தெரிவிக்க விரும்புவோர், அடுத்த மாதம், 11ம் தேதிக்குள், ஆணையத்தின் முகவரிக்கு தெரிவிக்கலாம்


மின் தட்டுப்பாட்டை போக்க யோசனை: குழுவில் இடம் பெற விண்ணப்பிக்க அழைப்பு

தமிழ்நாட்டில் மின்சார பற்றாக்குறை நிலவுவதால் அவற்றை சரிசெய்ய அரசு பல்வேறு புதிய திட்டங்களை தீட்டி செயல்படுகிறது. இதன் காரணமாக புதிய திட்டங்களின் மூலம் அதிக அளவு மின் உற்பத்தி செய்யப்படுவதால் மின்தட்டுப்பாடு ஓரளவு குறைந்துள்ளது.
ஆனாலும், வியாபார நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு அதிக அளவு மின்சாரம் தேவைப்படுவதால் கூடுதல் தேவையை சமாளிக்க மின்வாரியம் திணறி வருகிறது.
எதிர்காலத்தை கருத்தில் கொண்டு புதிய மின்உற்பத்தி நிலையங்கள் கொண்டு வரப்படும் சூழ்நிலையில் மின்வாரியத்துக்கு ஆலோசனை வழங்க மின்சார ஒழுங்குமுறை ஆணையம், மின்சார தேவை மேலாண்மை தொடர்பான ஒழுங்கு முறையில் திருத்தங்களை செய்துள்ளது.