Tech. Assistant Physical Fitness, Terms Condition, Undertaking Forms


View Download



View Download



View Download

Internal Selection Tech.Asst in Various Circles/Divisions Allotment & Re-posting Orders


View Download



View Download



View Download



Download



View Download



View Download


View Download



View Download



View Download



View Download



View Download



View Download



View Download



View Download



View Download



View Download



View Download



View Download


View Download



View Download





View Download




View Download



View Download




View Download



15 T.A.Allotment Compassionate grounds Orders


View Download

954 T.A.Internal Selection Allotment Orders Issued


View Download



View Download

31 I.A. to Rev.Supr Suitability Called For


View Download
Annuxurex.pdf
View Download

344 Assistant to A/C Supr suitability Called for


View Download


View Download

கொரோனா-19 நோய் தொற்று ஏற்படும் மின் வாரிய பணியாளர்களுக்கு தற்காலிக தனி மையம் ஏற்படுத்தி தரக் கோரி அனைத்து தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக மாண்புமிகு. மின்துறை அமைச்சர் மற்றும் வாரியத்திற்கு அளித்த கடித நகல்


View Download

Regulation of Period of absence of Govt. Employees during lock down period G.O.Issued


View Download

தமிழக அரசு ஊழியர்கள் ஊரடங்கு காலத்தில் பணிக்கு வராவிட்டால் உரிய விடுப்பாக கருதப்படும்

....மாற்றுத்திறனாளிகள், மகப்பேறு காலத்தில் உள்ளவர்களுக்கு ஊரடங்கு காலத்தில் பணிக்கு வர முழு விலக்கு

...55 வயதுக்கு மேற்பட்ட அரசு ஊழியர்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு இருந்தால் co- mobidities உரிய மருத்துவச் சான்றின் பேரில் ஊரடங்கு காலப் பணியில் இருந்து விலக்கு அளிக்கப்படும்

....25.3.2020 முதல் 17.5.2020 வரை அனைவருக்கும் பணிக்காலமாக கருதப்படும்

....25.3.2020 க்கு முன் நீண்ட விடுப்பில் சென்று விடுப்பு காலம் முடிந்திருந்தாலும்  3.5.2020 வரைபணியில் சேர முடியாதவர்கள் பணியில் சேர்ந்த்தாக கருதப்படுவர்

....18.5.2020 முதல் ....அதாவது 50% பணியாளர்கள் அலுவலகம் வர ஆணையிட்ட பிறகு .....ஒரு நாள் கூட பணிக்கு வராதவர்கள் அவர்கள் அடுத்து பணிக்கு வரும் நாள் வரை தகுதி உள்ள விடுப்பாக கருதப்படும்

....தனக்கு சுழற்சி முறைப்படி பணி நாளாக அறிவிக்கப்பட்ட நாளில் பணிக்கு வரவில்லை என்றால் அவர்கள் அடுத்து பணிக்கு வரும் நாள் வரை விடுப்பாக கருதப்படும்

....கோவிட்19 அல்லாத மருத்துவ காரணங்களுக்கு உரிய மருத்துவச் சான்றின்பேரில் விடுப்பு வழங்கலாம்

....தனக்கோ குடும்ப உறுப்பினருக்கோ கோவிட்19 தொற்று இருந்தால் அல்லது தனிமைப்படுத்தப்பட்டால் உரிய சான்றிதழ் பேரில் அக்காலம் சிறப்பு தற்செயல் விடுப்பாக கருதப்படும்

...இந்த ஆணை வாரியங்கள்....சொசைட்டிகள்...கார்ப்பரேஷன்கள்..பல்கலைக்கழகங்கள்....கமிஷன்கள்...
இன்ஸ்டிடியூஷன்கள்....ஆகியவற்றிற்கும் பொருந்தும்

68 Acct Supr to AAO Panel & 65 Allotment Orders for the year 2019-20 Orders


View Download



View Download



40 Adm. Sup to AADO Panel for the year 2019-20 & 35 Adm. Supr to AADO Allotment Orders Issued



View Download

Employment Assistance on Compassionate Grounds Adoption of G.O.18 dt.23.01.20 Orders Issued


View Download

2 தனித்தனி மாதங்களாகக் கணக்கிட்டு மின் கட்டணம் வசூலிக்கக் கோரிய வழக்கு: அரசு விரிவான அறிக்கை அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

மின் கட்டணத்தை இரண்டு இரண்டு மாதங்களாகத் தனித்தனியாகக் கணக்கிட உத்தரவிட வேண்டும் எனக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடரப்பட்டது. இதில் அரசு விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட உயர் நீதிமன்றம் வழக்கை ஜூன் 22-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
கரோனா பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, மின் கணக்கீடு செய்யாததால், வீட்டு உபயோக தாழ்வழுத்த மின் நுகர்வோர், முந்தைய மாதத்திற்குச் செலுத்திய கட்டணத்தின் அடிப்படையில் கட்டணம் செலுத்தலாம் எனவும், பின்னர் மின்சாரக் கணக்கீடு செய்யும்போது, இரண்டு இரு மாதங்களுக்கும் சேர்த்து மின்சாரப் பயன்பாடு கணக்கிட்டு, முந்தைய மாதக் கட்டணத்தின் அடிப்படையில் செலுத்தப்பட்ட தொகையைக் கழித்து விட்டு, மீதத் தொகைக்கு பில் செலுத்த வேண்டும் எனவும் மின்சார வாரியம் அறிவித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து தேசிய மக்கள் சக்திக் கட்சித் தலைவர் எம்.எல்.ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்திருந்தார்.
அவரது மனுவில், “முன்பு பயன்படுத்தப்பட்ட மின்சாரத்தின் யூனிட் அளவில் கணக்கிடாமல், முந்தைய கட்டணத்தின் அடிப்படையில் கட்டணத்தை நிர்ணயிப்பதன் மூலம், 12 சதவீதம் முதல் 14 சதவீதம் வரை அதிக கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவை மீறிய செயல்.
மின்சார வாரியத்தின் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். முந்தைய மின் அளவீட்டின் அடிப்படையில், முதல் இரு மாதங்களுக்கான கட்டணத்தை தனி ‘பில்’லாகவும், மீத யூனிட்களை அடுத்த இரு மாதங்களுக்கான ‘பில்’லாகவும் நிர்ணயித்து தனித்தனி பில்கள் தயாரிக்க உத்தரவிட வேண்டும்.
நான்கு மாதங்களுக்குச் சேர்த்து கட்டணம் நிர்ணயிப்பதால், 500 யூனிட்களுக்கு மேல் மின் பயன்பாடு வரும்போது, அதற்கான கட்டணம் நிர்ணயிக்கப்படும். இதனால் 500 யூனிட்களுக்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் 96 சதவீத மக்கள் பாதிக்கப்படுவார்கள். ஊரடங்கால் வேலைவாய்ப்பை இழந்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் அதிக கட்டணம் செலுத்த வேண்டி வரும்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு இன்று உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சுப்பையா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. “மின் கட்டணத்தை யூனிட் அளவில் கணக்கிடாமல் ஒட்டுமொத்தமாக 4 மாதமாகக் கணக்கிடுவதால் கூடுதலாகப் பணம் செலுத்தும் நிலைக்குப் பொதுமக்கள் தள்ளப்படுகின்றனர். 2 தனித்தனி மாதங்களாகக் கணக்கிட்டுப் பணம் வசூலிக்க வேண்டும் எனக் கோரப்பட்டது.
அரசுத் தரப்பில் பதிலளித்த அரசு வழக்கறிஞர், “மின் கட்டண நிர்ணயம் சரியான முறையில் செய்யப்பட்டு வருகிறது, அதைப் பதில் மனுவாகத் தாக்கல் செய்கிறோம். அதுவரை நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக்கூடாது” எனக் கேட்டுக்கொண்டார்.
இதை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம் விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய தமிழக அரசு மற்றும் டான்ஜெட்கோவுக்கு உத்தரவிட்ட நீதிபதி அமர்வு வழக்கை ஜூன் 22-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Physically Challenged Person Exemption duty from 01.06.20 to 30.06.20 in 4 Districts Orders


View Download

தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த ஜூன் 15-ம் தேதி வரை அவகாசம்

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களைத் தவிர்த்து பிற மாவட்டங்களுக்கு மின் கட்டணம் செலுத்த ஜூன் 15-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.


View Download

மின்துறையில் இந்தியா முழுமைக்குமான நிகழ்நேரச் சந்தையை டெல்லியில் இன்று காணொலிக் காட்சி மூலம் மத்திய மின்துறை இணையமைச்சர் ஆர்.கே.சிங் தொடங்கி வைத்தார்

மின்துறையில் இந்தியா முழுமைக்குமான நிகழ்நேரச் சந்தையை, மத்திய மின்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

மின்துறையில் இந்தியா முழுமைக்குமான நிகழ்நேரச் சந்தையை டெல்லியில் இன்று காணொலிக் காட்சி மூலம் மத்திய மின்துறை இணையமைச்சர் ஆர்.கே.சிங் தொடங்கி வைத்தார்.

உலகளவில் நிகழ்நேரச் சந்தையை வைத்திருக்கும் சில மின்சந்தைகளில் ஒன்றாக நிலை இந்திய மின்துறை சந்தையை இது நிலை நிறுத்தியுள்ளது.

இந் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், பான்-இந்தியா விற்பனையாளர்களின் எரிசக்தித் தேவைகளை உடனடியாக நிறைவேற்றுவதற்கும், இந்த நிகழ்நேரச் சந்தை திட்டமிட்ட அமைப்பு என்பதை சுட்டிக்காட்டினார்.

நிகழ்நேரச் சந்தை அறிமுகம், சந்தையில் நிகழ்நேரச் சமநிலையை வழங்கத் தேவையான நெகிழ்வுத் தன்மையைக் கொண்டுவரும். அதே நேரத்தில் இந்த அமைப்பில் கிடைக்கும் கூடுதல் திறனை உகந்த அளவு பயன்படுத்துவதை உறுதிசெய்யும். தேசிய அளவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தையுடன், நாட்டின் தேவையில் பன்முகத்தன்மையைச் சமாளிக்க இது உதவும்

நிகழ்நேரச் சந்தை ஒருநாளில் ஒவ்வொரு 30 நிமிடத்துக்குள்ளும், ஒரே விலையுடன் கூடிய ஏலமாக இருக்கும். சந்தைச் செயல்பாட்டு நேரத்தில் விரும்பிய உறுதியினைக் கொண்டு வருவதற்கு, ‘கதவுமூடல்’ என்ற கருத்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வாங்குவோரும்/விற்போரும் ஒவ்வொரு 15 நிமிடத்துக்கும் ஏலம் கேட்கலாம். இந்த நிகழ்நேரச் சந்தை மின்விநியோக நிறுவனங்களுக்கு (டிஸ்காம்) போட்டி விலையில் மிகப்பெரிய

சந்தையை அணுக மாற்று முறையை வழங்கும். மறுபுறம், உற்பத்தியாளர்கள் தங்கள் தேவையற்ற கோரிக்கைத் திறனுடன், இந்த நிகழ்நேரச் சந்தையில் பங்குபெற்றுப் பயனடையலாம். நீண்ட கால ஒப்பந்தம் பெற்ற உற்பத்தியாளர்கள், இந்த நிகழ்நேரச் சந்தையில் கலந்து கொண்டு, டிஸ்காம்நிறுவனங்களுடன் நிகர ஆதாயத்தைப் பகிர்ந்து கொள்ளும் வழிமுறையும் உருவாக்கப்பட்டுள்ளது. நிகழ்நேரச் சந்தையில் விரைவான பரிமாற்றத்தை உறுதி செய்ய தேசிய மின்சுமை விநியோக மையம்- போசோகோ, தேவையான தானியங்கள் மற்றும் ஒருங்கிணைப்பு வசதியையும் அளிக்கிறது.

2022ஆம் ஆண்டுக்குள் 175 ஜிகாவாட் ஆர்திறன் என்ற உருவாக்க மத்திய அரசின் இலக்கு, பான்-இந்தியாவின் தூண்டப்பட்ட புதுப்பிக்கத்தக்க ஊடுருவலை இயக்குகிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியின் இடைப்பட்ட மற்றும் மாறுபட்ட தன்மை காரணமாக மின்தொகுப்பு நிர்வாகச் சவால்களை குறைக்க இந்த நிகழ்நேரச் சந்தை உதவும். மேலும் மின்தொகுப்புக்குள், அதிகளவிலான புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஒருங்கிணைக்க உதவும்.

இதன் மூலம் குறைவான ஏலநேரம், விரைவான திட்டமிடல், வரையறுக்கப்பட்ட செயல்முறைகள் ஆகியவை எதிர்பார்க்கப்படுகின்றன. இதன் மூலம் இந்தியா முழுவதும் உள்ள மின்தொகுப்பு வளங்களை, பங்குதாரர்கள் அணுகி, போட்டியை அதிகரிப்பர். திறமையான மின் கொள்முதல் திட்டவசதி, திட்டமிடல், விநியோகம், ஏற்றத்தாழ்வு கையாளுதல் போன்வற்றால், துறை நிர்வாகம் சிறக்க இது வழிவகுக்கும்

சூரிய சக்தியில் இயங்கும் பம்பு செட் அமைக்க மானியம்



View Download

மின்வாரியத்தை குறைசொல்லவோ, குற்றம் சாட்டுவதோ நோக்கமல்ல: நடிகர் பிரசன்னா




நடிகர் பிரசன்னா தற்போது தமிழ் சினிமா துறையில் பிஸியான நடிகர்களில் ஒருவர். அவர் நேற்று தமிழ்நாடு மின்சார வாரியம் TNEB பற்றி ஒரு ட்விட் பதிவிட்டு இருந்தார். "தமிழ்நாடு மின்சார வாரியம் TNEB கொரோனா லாக்டவுனில் கொள்ளை அடிக்கிறது என எத்தனை பேர் நினைக்கிறீர்கள்?" என அந்த ட்விட்டில் கேட்டு இருந்தார்.
நெட்டிசன்கள் பலரும் அது உண்மைதான் மின் கட்டணம் அதிகரித்து உள்ளது என பதிவிட ஆரம்பித்தனர். மேலும் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த அவர் மின் கட்டணம் தனக்கு 70 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் வந்திருப்பதாகவும், அதை தன்னால் செலுத்தி விட முடியும் என்றும், சாதாரண மக்கள் எப்படி கட்டுவார்கள்? என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

இது சர்ச்சையான நிலையில் தமிழ்நாடு மின்சார வாரியம் அவர் வீட்டில் மின்கட்டணம் பற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது.

அதில் பிரசன்னா வீட்டில் உள்ள மின் இணைப்பு கட்டணம் பற்றி தெளிவாக விளக்கி உள்ளனர். பிரசன்னா வீட்டில் நான்கு மாதத்தில் 6920 யூனிட் பயன்படுத்தப்பட்டு உள்ளது. அதை இரண்டாக பிரித்து முதல் இரண்டு மாதங்களுக்கான 3460 யூனிட்டுக்கு ரூ. 21,316 ரூபாயும், அடுத்த 3460 யூனிட்டுக்கு மற்றொரு 21,316 ரூபாயும் என மொத்தமாக 42,632 ருபாய் மின் கட்டணமாக விதிக்கப்பட்டு உள்ளது.

ரீடிங் எடுக்காமல் அதற்கு முந்தைய மாத தொகையையே முன்பு நிர்ணயிக்கப்பட்ட 13,528 ரூபாயை தற்போது வரை பிரசன்னா செலுத்தவில்லை. அதனால் மொத்த கட்டணம் ரூ.42,632 தற்போது மின் கட்டணமாக விதிக்கப்பட்டு உள்ளது என அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் பிரசன்னா தான் மின்சார வாரியத்தை குறை கூற வேண்டும் என்கிற எண்ணத்தில் அப்படி பேசவில்லை என வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

"உண்மைதான்‌! ரீடிங்‌ எடுப்பதிலிருந்து 10 நாட்களுக்குள்‌ பொதுவாக கட்டணம்‌ செலுத்தும்‌ பழக்கமுள்ள நான்‌ , மார்ச்‌ மாதம்‌ ரீடிங்‌ எடுக்காததால்‌ கட்டணம்‌ செலுத்த தவறியது உண்மைதான்‌ . அதே அளவு இதற்கு முன்‌ காலதாமதமின்றி தவறாமல்‌ கட்டணம்‌ செலுத்தி வருகிறேன்‌ என்பதும்‌ உண்மை. வாரியம்‌ சொல்வதுபோல்‌
நான்கு மாத கணக்கீட்டாலும்‌ மார்ச்‌ மாத கட்டணம்‌ சேர்த்தும்‌ எனக்கு தனிப்பட்ட கட்டணம்‌ கூடுதலாக வந்திருக்கலாம்‌. என்‌ தனிப்பட்ட பிரச்னையாக இதை நான்‌ எழுப்பவில்லை."

"அதிக தொகை கட்டணமாக வந்திருப்பதாக எவ்வளவு பேர்‌ நினைக்கிறார்களென்று அறிந்துகொள்ளவே என்‌ ட்வீட்‌. மின் வாரியத்தை குறை சொல்வதோ குற்றம்‌ சாட்டுவதோ என்‌ நோக்கமல்ல. பொதுவாக எல்லோருக்கும்‌ வந்திருப்பதாக சொல்லப்படும்‌ அதிக கட்டணம்‌ குறித்த கவன ஈர்ப்பும்‌ , அதன்மூலம்‌ வாரியமோ அரசோ இந்த இக்கட்டான சூழலில்‌ ஏதாவது முறையில்‌ இப்பிரச்னையில்‌ மக்களுக்கு ஒரு தளர்வோ கட்டணம்‌ செலுத்த தவணை அல்லது கால அவகாசமோ தருமாயின்‌ மிக்க உதவியாக இருக்கும்‌ என்பதே என்‌ வேண்டுகோள்‌."
"நேற்றைய தொலைக்காட்சி உரையாடலிலும்‌ அதையே நான்‌ குறிப்பிட்டிருக்கிறேன்‌. ஊரடங்கு காலங்களில்‌ மருத்துவ, காவல்‌, சுகாதார துறைகள்‌ போலவே மின்வாரிய ஊழியர்களும்‌, அதிகாரிகளும்‌ அயராது பணியாற்றியிருக்கிறார்கள்‌ என்பதை நன்றியோடு பாராட்டவும்‌ நான்‌ மறக்கவில்லை. மற்றபடி வாரியாதையோ அரசையோ குறைகூறுவதற்கான உள்நோக்கமில்லை. உள்நோக்கமில்லாதபோதும்‌ என்‌ வார்த்தை மின்வாரிய ஊழியர்கள்‌, அதிகாரிகள்‌ மனம்நோகச்‌ செய்திருப்பின்‌ அதற்காக வருந்துகிறேன்‌
மக்கள்‌ மீது விழுந்திருக்கும்‌ இந்த எதிர்பாரா சுமையை வாரியமும்‌ அரசும்‌ இறக்கிவைக்குமென எதிர்பார்க்கிறேன்‌."

"பி.கு: என்‌ வீட்டிற்கு நிர்ணயிக்கப்பட்ட முழு தொகையும்‌ எந்த நிலுவையுமின்றி
இன்று காலை நான்‌ செலுத்திவிட்டேன்‌."

இவ்வாறு பிரசன்னா கூறியுள்ளார்.


நடிகர் பிரச்சனா வீட்டில் அதிக கட்டணம் வர என்ன காரணம் என தமிழக மின்வாரியம் விளக்கம்.

மின்கட்டணம் கட்டவில்லை: பிரசன்னாவுக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம்; ட்வீட்டுக்கு கண்டனம்
tneb-press-release-for-prasanna
பிரசன்னா மின்கட்டணம் கட்டவில்லை என்று கூறி, நீண்ட விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு மின்சார வாரியம். மேலும், அவருடைய ட்வீட்டுக்கும் கண்டனம்

சில தினங்களுக்கு முன்பு தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகரான பிரசன்னா, தமிழ்நாடு மின்சார வாரியம் கொள்ளையில் ஈடுபடுகிறது என்று தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்தார். இது தொடர்பாக பிரசன்னா "இந்த கோவிட் ஊரடங்கின் மத்தியில் தமிழ்நாடு மின்சார வாரியம் கொள்ளையில் ஈடுபடுகிறது என்று உங்களில் எத்தனை பேர் உணர்கிறீர்கள்" என்று குறிப்பிட்டார்.


பிரசன்னாவின் இந்த ட்வீட்டைத் தொடர்ந்து, சமூக வலைதளத்தில் பலரும் எங்கள் வீட்டிலும் பில் அதிகம் தான் என்று பதிவிடத் தொடங்கினார்கள். இதனைத் தொடர்ந்து மின்சார வாரியம் இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ளது.

மேலும், நடிகர் பிரசன்னாவின் ட்வீட்டுக்கு விளக்கமளித்து தனியாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு மின்சார வாரியம். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:

"தமிழ்நாட்டில் வீட்டு உபயோகத்தை உள்ளடக்கிய தாழ்வழுத்த மின் நுகர்வோருக்கு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கணக்கெடுக்கப்பட்டு மின் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது நிலவிவரும் கரோனா வைரஸ் பாதிப்பினால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், மின் நுகர்வோர் மற்றும் ஊழியரின் பாதுகாப்பு காரணம் கருதி, மின் கணக்கெடுப்பு எடுக்க முடியாத நிலையில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மின் கணக்கீடு செய்யப்படாமல் முந்தைய மாதம் மின்நுகர்வோர் செலுத்திய தொகையைச் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. இவ்வாறு வசூல் செய்யப்படும் தொகை அடுத்து வரும் மாத கணக்கெடுப்புத் தொகையில் சரிசெய்யப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஆனால் ஊரடங்கு கால கட்டத்தில் வீட்டு மின்நுகர்வு அதிகரித்துள்ளதால் மின் கணக்கெடுப்பு நடத்தும் பொழுது அதிக கட்டணம் வரும் நிலையில் மின்வாரியம் முந்தைய மாத கட்டணத்தை மட்டுமே கழித்து யூனிட்டை கழிப்பதில்லை என்று ஊடகங்களில் வரும் செய்தி தவறானதாகும். மேலும் நடிகர் பிரசன்னா மின்வாரியம், ஊரடங்கு காலகட்டம் நிறைவடைந்த பின்பு மின் கணக்கெடுப்பு என்ற முறையில் கொள்ளை அடிப்பதாகத் தவறான செய்தியை வெளியிட்டுள்ளார்.

இந்த கணக்கெடுப்பு முறையானது தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிகளின்படி நடைமுறைப்படுத்தப்படுவதால் நடிகர் பிரசன்னா தமிழ்நாடு மின்சார வாரியத்தை கடும் சொற்களால் குற்றம்சாட்டுவது கண்டிக்கத்தக்கதாகும்.

பிரசன்னா வீட்டில் இரண்டு மின் இணைப்புகள் உள்ளன. மின் இணைப்பு எண்.328-010-60 மற்றும் 328-010-61. இந்த மின் இணைப்பு எண்.328-010-60-ஐ கணக்கீடு செய்ததில் ஜனவரி மாதம் யூனிட் 2280 மின் நுகர்வுக்கு ரூ.13,528/-ஐ செலுத்தியுள்ளார். மார்ச் மாதம் ஊரடங்கு அறிவிப்பால் கணக்கீடு செய்ய முடியாத நிலையில் முந்தைய மாத கட்டணமான ரூ.13,528/- நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த கட்டணம் இதுவரை மின்வாரியத்திற்குச் செலுத்தப்படவில்லை.

மேற்கண்ட மின் இணைப்பில் மே மாதம் நான்கு மாதங்களுக்கான மொத்த நுகர்வு 6920 யூனிட் என்று கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த 6920 யூனிட்டை மொத்தமாகக் கணக்கிட்டால் இதற்கான கட்டணம் ரூ.44,152/- ஆகும்.

ஆனால் செய்தி குறிப்பில் கூறியுள்ளபடி 6920 யூனிட்டானது இரண்டு மாத மின் கணக்கெடுப்பு அடிப்படையில் இரு இரண்டு மாத நுகர்வாகப் பிரிக்கப்பட்டு 3460 யூனிட், வீதப்பட்டியலின்படி (Tariff Salab) மின் கட்டணம் கணக்கிடப்பட்டுள்ளது.

3460 யூனிட்டுக்கான மின் கட்டணம் ரூ.21,316/- ஆகும். ஆக இரண்டு 3460 யூனிட்டுக்கான மின் கட்டணம் ரூ.42,632/- ஆகும். இவற்றில் முந்தைய மாத கட்டணம் ரூ.13,528/- கழிக்கப்பட்ட பின் ரூ.29,104/- மட்டுமே மே மாத கட்டணமாக வசூலிக்கப்படும். ஆனால் நடிகர் பிரசன்னா முந்தைய மாத கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்ட ரூ.13,528/-ஐ செலுத்தாத காரணத்தினால் அவர் மொத்தமாகச் செலுத்த வேண்டிய தொகை ரூ.42,632/- ஆக உள்ளது.

இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை, வழக்கமான நடைமுறை கணக்கெடுப்பு முறையில்தான் கணக்கீடு செய்யப்பட்டு வருகிறது.

ஆகவே மின்சார வாரியத்தால் மின் கட்டணம் கணக்கீடு செய்யப்படும் பொழுது, நான்கு மாத மின் நுகர்வு இரு இரண்டு மாத மின் நுகர்வாகப் பிரிக்கப்பட்டு அதற்கான வீதப்பட்டியலில் (Bi-monthly Slab) மின் கட்டணம் கணக்கிடப்பட்டு, முந்தைய மாத கட்டணம் கழிக்கப்பட்டபின் மின் கட்டண தொகை கணக்கிடப்படுகிறது. இதைக் கருத்தில் கொள்ளாமல், முந்தைய மாத யூனிட்டை கழிக்காமல் தொகையை மட்டுமே கழிக்கப்படுகிறது என்ற செய்தி தவறானதாகும். பொதுமக்கள் தங்களது கணக்கீட்டு முறையில் சந்தேகங்கள் இருந்தால் சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலகத்தை அணுகி தங்களது சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளலாம். மற்றும் கணக்கீடு செய்யப்படும் முறை தமிழ்நாடு மின்சார வாரியத்தின் www.tangedco.gov.in என்ற இணையதளத்திலும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது"

இவ்வாறு தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

S.L.S. G.O. in Class III & IV service Adopted TANGEDCO/TANTRANSCO 9A Notice Issued


View Download

Disable Persons Exemption duty from 01.06.2020 to 30.06.2020 G.O Issued



View Download

Dropping of action death of the Govt Servant/ Pensioners Adopted in TANGEDCO Orders of action death of the Govt Servant/ Pensioners Adopted in TANGEDCO Orders


View Download

Special Adoption Leave to Women Govt.Servant Adopted to TANGEDCO orders


View Download

Minimum service First for promotion Amendment Issued


View Download

Card Billing staff working hour

 Card Billing staff working hour     Click