Showing posts with label ஓய்வூதியம். Show all posts
Showing posts with label ஓய்வூதியம். Show all posts

வருங்கால வைப்புநிதியில் ரூ.50 ஆயிரம்வரை எடுக்க வரி கிடையாது நாளை முதல் அமல்

புதுடெல்லி,
வருங்கால வைப்புநிதியில் இருந்து ரூ.30 ஆயிரம்வரை எடுத்தால், வரி பிடித்தம் கிடையாது என்ற நடைமுறை இப்போது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ரூ.50 ஆயிரம்வரை எடுக்க வரி பிடித்தம் செய்யப்பட மாட்டாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதற்கான அறிவிக்கை நேற்று வெளியிடப்பட்டது. இந்த புதிய நடைமுறை நாளை (ஜூன் 1–ந் தேதி) முதல் அமலுக்கு வருகிறது.

பழைய ஓய்வூதிய திட்டம் வல்லுனர் குழு அமைப்பு. அரசு ஆணை வெளியீடு

தமிழகத்தில், 2003 ஏப்., 1 முதல், அரசுப் பணியில் சேர்ந்துள்ள, அரசு அலுவலர்களிடம் இருந்து, பிடித்தம் செய்யப்பட்ட, ஓய்வூதிய பங்களிப்புத் தொகையும், அரசின் பங்களிப்புத் தொகையும், அவற்றுக்கான வட்டித் தொகையும், அரசு கணக்கில் தனியே வைக்கப்பட்டுள்ளன.'பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தையே செயல்படுத்திட வேண்டும்' என, பல்வேறு அரசு அலுவலர் சங்கங்கள் கோரி வருகின்றன. 

                 'இந்த கோரிக்கை குறித்து தீவிரமாக ஆராயப்பட வேண்டும். எனவே, இது குறித்து ஆராய்ந்து, அரசுக்கு பரிந்துரைக்க, வல்லுனர் குழு அமைக்கப்படும். அந்த குழுவின் அறிக்கை அடிப்படையில், தக்க முடிவு எடுக்கப்படும்' என, சட்டசபையில், 110வது விதியின் கீழ், முதல்வர் ஜெயலலிதா, பிப்.,19ல் அறிவித்தார்.அதன்படி, ஐந்து பேர் அடங்கிய வல்லுனர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாந்தா ஷீலா நாயர் நியமிக்கப்பட்டுள்ளார்.



GO.65 FINANCE DEPT DATED.26.02.2016

மின்வாரிய ஓய்வூதியர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டுகோள்

    மின்வாரிய ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள், கருணைத் தொகை பெறுபவர்கள் அனைவரும் உரிய படிவங்களை வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

      தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மான கழகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 

         மின்வாரிய ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள், கருணைத் தொகை பெறுபவர்கள் அனைவரும் நிகழாண்டு முதல் புதிய வாழ்நாள் சான்று, பணியின்மை, மறு வேலைவாய்ப்பு சான்று படிவம், மணமாகாத, மறுமணம் புரிந்தமைக்கான சான்று படிவங்களை ஓய்வூதியம் பெறும் வங்கியில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே, ஜுன் மாதத்துக்குள் உரிய படிவங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்பது விதிமுறை ஆகும். 

 குறிப்பிட்ட காலத்துக்குள் படிவங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். இல்லையெனில், ஆகஸ்ட் மாதம் முதல் ஓய்வூதியம் நிறுத்தப்படும்.  ஆகையால், உரிய காலத்தில் ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என அந்தச் செய்திக்குறிப்பில் மின் வாரியம் தெரிவித்துள்ளது.

                           இதற்கான படிவங்களை கீழே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

மின்வாரியத்தில் ஒப்பந்தப் பணி காலத்திற்கு பணிக்கொடை வழங்க நீதிமன்றம் உத்தரவு ( தீக்கதிா் )

தூத்துக்குடி , செப்.25-ஒப்பந்தத் தொழிலாளியாக பணியில் சேர்ந்து பின்னர் நிரந்தர பணியாளர்களாக பணிஓய்வுபெற்ற தொழிலாளர்கள் 3 பேர்களுக்கு ஒப்பந்த பணி காலத்தையும் கணக்கில் எடுத்து பணிக்கொடை வழங்க பணிக்கொடை மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:தூத்துக்குடி மாவட்டம் மின் பகிர்மான வட்டத்தில் ஏ.நம்பிராஜன், கே.சண்முகம், எஸ்.அப்துல்வஹாப் ஆகியோர் முறையே 1.9.79, 1.10.82, 1.4.88 முதல் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி பணிநிரந்தரம் செய்யப்பட்டுள்ள அவர்கள் பின்னர் முறையே 31.3.03, 31.3.05, 30.6.04 தேதிகளில் பணி ஓய்வு பெற்றனர். இவர்களுக்கு தமிழ்நாடு மின்வாரியம் நிரந்தர பணிக்காலத்திற்கு மட்டும் பணிக்கொடை வழங்கி ஒப்பந்த காலத்திற்கு பணிக்கொடை வழங்க மறுத்தனர். எனவே பணிக்கொடை கட்டுப்பாடு அதிகாரி மற்றும் பணிக்கொடை மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. (முறையே ஞழுஹ 11/13, 12/13, 13/13) இந்த வழக்குகளில் 7.8.15 தீர்ப்பளிக்கப்பட்டது. ஒப்பந்தப்பணி காலத்தையும் கணக்கில் எடுத்து முறையே ரூ.53,500, 56,979, 28,592ஐ பணி ஓய்வுபெற்ற நாளிலிருந்து 10 சதவீத வட்டியுடன் வழங்க பணிக்கொடை மேல் முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.இந்த வழக்கினை தூத்துக்குடி மாவட்ட சிஐடியு இணைச் செயலாளர் பி.இசக்கிமுத்து நடத்தினார்.
நன்றி தீக்கதிா்.

மின்வாரியத்தில் குடும்ப ஓய்வூதியம் தொடா்பான வழக்கில் திருமண பதிவு கட்டாயமல்ல: ஐகோர்ட் அதிரடி

மதுரை:'இந்து திருமண பதிவுச் சட்டப்படி திருமண பதிவு என்பது அவரவர் விருப்பத்தை பொறுத்தது; கட்டாயமல்ல; திருமணத்தை பதிவு செய்யவில்லை என்பதற்காக, உரிமையை மறுக்க முடியாது. மனுதாரருக்கு, குடும்ப ஓய்வூதியம் மறுத்த உத்தரவு, ரத்து செய்யப்படுகிறது' என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டு உள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், ஸ்ரீவில்லிபுத்துார் தவமணி தாக்கல் செய்த மனு:
என் கணவர் ராஜு, மதுரை சமயநல்லுார் மின்வாரியத்தில் வருவாய் கண்காணிப்பாளராக பணிபுரிந்து, 2000ல் ஓய்வு பெற்றார்; 2014ல் இறந்தார். அவரது முதல் மனைவி துர்க்கையம்மாள், ஆதிதிராவிடர் நலப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்தார். அவர், 1997ல் இறந்தார்.எனக்கும், ராஜுவிற்கும், 1977ல் திருமணம் நடந்தது. எனக்கு மூன்று குழந்தைகள் பிறந்தனர். துர்க்கையம்மாள் மகன் எங்களுடன் வசிக்கிறார்.

நிராகரித்தார் : குடும்ப ஓய்வூதியம் கோரி, மதுரை மின்வாரிய (டான்செட்கோ) கண்காணிப்பு பொறியாளரிடம், 2014ல் விண்ணப்பித்தேன். அவர், உள் தணிக்கை அலுவலருக்கு (ஓய்வூதியம்) அனுப்பினார். அவர் திருமண பதிவுச் சான்று இல்லை எனக்கூறி நிராகரித்தார்.அதை ரத்து செய்து, குடும்ப ஓய்வூதியம் வழங்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் தவமணி குறிப்பிட்டிருந்தார்.மனுவை விசாரித்து, நீதிபதி எஸ்.வைத்திய நாதன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:தமிழ்நாடு திருமண பதிவுச் சட்டம், 2009ல் அமலானது. அதற்கு முன் இதுபோன்ற நிபந்தனை இல்லை. மனுதாரருக்கு போட்டியாக, வேறு யாரும் குடும்ப ஓய்வூதியம் கோரவில்லை.இந்து திருமண பதிவுச் சட்டப்படி, திருமண பதிவு என்பது அவரவர் விருப்பத்தை பொறுத்தது; கட்டாயமல்ல. பதிவு செய்யவில்லை என்பதற்காக, திருமணம் செல்லாது எனக்கூற முடியாது.

திருமணத்தை பதிவு செய்யவில்லை, பதிவுச் சான்று சமர்ப்பிக்கவில்லை என்பதற்காக நியாயமான உரிமைகளை மறுக்க முடியாது.பதிவு செய்யப்படாத திருமணங்கள் செல்லாது எனக் கருதினால், ஒட்டுமொத்த திருமண முறையில் குழப்பம் ஏற்படும். பதிவு செய்யாத திருமணத்தின் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கும் சிக்கல் ஏற்படும்.

ஓட்டைகள் :திருமண பதிவுச் சட்டம் கொண்டு வந்த, சட்டசபையின் நோக்கம் பாராட்டும் வகையில் உள்ளது. திருமணத்தை பதிவு செய்வதை தவிர்க்க பல்வேறு ஓட்டைகள் உள்ளன.மனுதாரருக்கு, 1977ல் திருமணம் நடந்துள்ளது. திருமண அழைப்பிதழ் உட்பட, 12 ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார். மின்வாரியத்தின் கருத்து ஏற்புடையதல்ல. குடும்ப ஓய்வூதியம் மறுத்த உத்தரவு, ரத்து செய்யப்படுகிறது.சென்னை உள் தணிக்கை அலுவலர் (ஓய்வூதியம்) ஆவணங்களை பரிசீலித்து, குடும்ப ஓய்வூதியத்தை, இரு மாதங்களில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, தீர்ப்பில் நீதிபதி கூறியுள்ளார்

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்து பொது நல வழக்கு இன்று மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் விசாரணைக்கு வருகிறது

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றத்தில் திரு. எங்கெல்ஸ் அவர்களால் தொடரப்பட்ட பொது நல வழக்கு(வழக்கு எண்.11987 / 2015) நாளை நீதிமன்ற எண்.9ல் விசாரணைக்கு வரவுள்ளது. 
 
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் பணி ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பிடித்தம் செய்த தொகை வழங்கவும், ஓய்வூதியம் வழங்க உத்தரவிடக் கோரப்பட்டுள்ளது. 
 
மேலும் இதுவரை பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் பிடித்தம் செய்த தொகையை PFRDAவிடம் தமிழக அரசு ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பி.எப் தொகையின் திரும்பப்பெறும் அளவை 75%ஆக குறைக்கத் திட்டம்

மாத சம்பளம் பெறும் ஊழியர்களின் பிராவிடென்ட் பண்ட் தொகைக்கான திரும்பப் பெறும் அளவை 75 சதவீதமாகக் குறைக்க, ஊழியர் சேமலாப நிதி அமைப்பு (EPFO) திட்டமிட்டு வருதிறது. தற்போது இதன் அளவு 100 சவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. பி.எஃ பணத்தை மக்கள் சரியான காரணத்திற்காகப் பயன்படுத்த தவறுவதால் திரும்பப் பெறும் அளவை 75 சதவீதமாகக் குறைத்து மீதமுள்ள தொகையைப் பணியாளரின் ஒய்விற்குப் பின் பென்ஷன் முறையில் அளிக்க முடிவு செய்துள்ளது EPFO அமைப்பு.


100% திரும்பப் பெறுதல்
தற்போது உள்ள முறையின் படி ஊழியர்களுக்கு வேலை பறிபோனால் இரண்டு மாதத்திற்குப் பிறகு முழுத் தொகையும் பெற்றுக்கொள்ளலாம் திருமணச் செலவுகள் போன்ற காரணங்களுக்காகப் பி.எஃ பணத்தில் 100% எடுத்துக்கொள்ளலாம்.

75% மட்டுமே 
ஆனால் ஊழியர் சேமலாப நிதி அமைப்பின் ஆய்வுகளின் படி ஊழியர்கள் மேற்கொண்ட காரணங்களுக்காகப் பணத்தைச் செலவு செய்யாமல் பிறவற்றிக்குச் செலவு செய்வதாகத் தெரிகிறது. இதனைத் தடுக்கவே இத்தகை முடிவுகளுக்கு மத்திய அரசிடம் இவ்வமைப்பு பரிந்துரை செய்துள்ளது. காலப்போக்கில் இதன் அளவு 50 சதவீதம் வரையும் குறைய வாய்ப்புள்ளதாகக் கருத்து நிலவுகிறது.

2 வது மனைவிக்கு சட்டப்படி ஓய்வூதியம் உண்டு: உயர்நீதிமன்றம்

முறைப்படி திருமணமாகாவிட்டாலும் 2வது மனைவி சட்டப்படி ஓய்வூதியம் பெற உரிமையுண்டு என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அரிபரந்தாமன் தீர்ப்பு வழங்கியுள்ளார்.கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த தலைமை காவலரான ஸ்டான்லி கடந்த 1973 ஆம் ஆண்டு ஜூன் 6ம் தேதி சுகந்தி என்ற பெண்ணை திருமணம் செய்தார். இருவருக்குமான திருமண வாழ்க்கையில் ரூத் எஸ்பியா என்ற மகள் பிறந்தார். அதன் பின் இரண்டு வருடங்களில் கணவன்-மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். முதல் திருமணத்திற்கான பந்தம் முறிவடையாத நிலையில், கடந்த 1976 ஆம் ஆண்டு ஜூன் 23-ந் தேதி சுசீலா என்ற பெண்ணை ஸ்டான்லி திருமணம் செய்துகொண்டார்.அவர்களுக்கு நக்கீரன் என்ற மகன் பிறந்தார். தற்போது நக்கீரனுக்கு 35 வயதாகிறது. இந்நிலையில் கணவரிடமிருந்து விவாகரத்து கேட்டு முதல் மனைவி சுகந்தி வழக்கு தொடர்ந்தார்.

அவ்வழக்கின் மீதான விசாரணையின் முடிவில் கடந்த 2003 ஆம் ஆண்டு ஈரோடு மாவட்ட நீதிமன்றம் சுகந்தி-ஸ்டான்லி இடையேயான திருமண பந்தத்தை முறித்து வைத்தது. பின்னர் கடந்த 2005 ஆம் ஆண்டு சுகந்தி காலமானார்.அதே சமயம் 2001ஆம் ஆண்டு காவல்துறை பணியில் இருந்து ஓய்வு பெற்ற ஸ்டான்லி, தனது ஓய்வூதிய தொகையை மாதா மாதம் பெற்று வந்தார். பின்னர் கடந்த 2007ஆம் ஆண்டில் தன்னுடைய மரணத்திற்கு பின் 2வது மனைவியான சுசீலாவுக்கு ஓய்வூதியம் வழங்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஸ்டான்லி பரிந்துரை கடிதம் கொடுத்தார்.

பின்னர் 2011 ஆம் ஆண்டு ஸ்டான்லி காலமானார்.இதையடுத்து கடந்த 2014 செப்டம்பர் மாதம் அம்மாவட்ட கண்காணிப்பாளர், ஸ்டான்லியின் ஓய்வூதிய தொகையை சுசீலாவுக்கு வழங்கலாம் என்று முன்மொழிந்து முதன்மை கணக்காளர் நாயகம் (கணக்குகள் மற்றும் உரிமங்கள்) அவர்களுக்கு கடிதம் எழுதினார்.ஆனால் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் கடிதத்தை ஏற்க மறுத்த, கணக்காளர் நாயகம் சுசீலாவுக்கு ஓய்வூதியம் வழங்க முடியாது என கடந்த பிப்ரவரி 2015 ஆம் ஆண்டு பதிலளித்தார். இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சுசீலா வழக்கு தொடர்ந்தார். இம்மனுவை விசாரித்து வந்த உயர்நீதிமன்ற நீதிபதி அரிபரந்தாமன் தீர்ப்பில் கூறியிருப்பதாவது:சுசீலாவுக்கும், ஸ்டான்லிக்கும் இடையே நடைபெற்ற திருமணம் சட்டப்படி செல்லாது என்ற போதிலும், கடந்த 1976 ஆம் ஆண்டு முதல் ஸ்டான்லியுடன் சுசீலா வாழ்ந்து வந்துள்ளார். ஸ்டான்லியின் மரணம் வரை சுசீலா உடன் இருந்துள்ளார். சுகந்திக்கும் விவாகரத்து வழங்கப்பட்டுவிட்டது. ஸ்டான்லியும் தனக்குப்பின் சுசீலாவுக்கு ஓய்வூதியம் வழங்கவேண்டும் என்று பரிந்துரைத்துள்ளார். இதையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல் கணக்காளர் நாயகம் மாவட்ட கண்காணிப்பாளரின் கடிதத்தை ஏற்க மறுத்து, சுசீலாவுக்கு ஓய்வூதியம் வழங்கமுடியாது என்று கூறியுள்ளார்.எனவே கணக்காளர் நாயகத்தின் முடிவை ரத்து செய்து, ஸ்டான்லி இறந்த பின்புள்ள காலத்திற்கான ஒட்டுமொத்த ஓய்வூதிய தொகையையும் 12 வார காலத்திற்குள் சுசீலாவுக்கு வழங்கவேண்டும் என்றும், அதன் பின் சுசீலாவுக்கு வழக்கமாக மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கவேண்டும் இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

CPS. தொகையில் 25% பெற்று கொள்ளலாமா ???


CPS முதலிட்டிலிருந்து 25% வரை பெற்றுக்கொள்ள பரிந்துரை

PFRDA - CPS - GUIDELINES FOR WITHDRAWAL OF 25 % OF ACCUMULATED CONTRIBUTIONS BY NPS SUBSCRIBERS CLICK HERE...


PFRDA - CPS முதலிட்டிலிருந்து 25% வரை பெற்றுக்கொள்வதற்கான பரிந்துரையை 15/01/2014 அன்று தனது வலைதளத்தில் வெளியிட்டுள்ளது

நிபந்தனைகள்:

1) தேவைகள்

a) குழந்தைகளின் மேல் படிப்பு செலவு

b) குழந்தைகளின் திருமணம்

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வாக்குறுதி அளிப்பவருக்கே ஆதரவு: மத்திய, மாநில அரசு ஊழியர்கள் சங்கக் கூட்டத்தில் முடிவு

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வாக்குறுதி அளிப்பவருக்கே ஆதரவு தர மத்திய, மாநில அரசு ஊழியர்கள் திட்டமிட்டுள்ளனர். இதுதொடர்பாக கடந்த 4-ம் தேதி நாக்பூரில் நடந்த கூட்டத்தில் இதற்கான முடிவை ஊழியர்கள் சங்கங்கள் எடுத்துள்ளன. 

மத்திய, மாநில அரசுப் பணிகளில் சுமார் 1.50 கோடிக்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். கடந்த 2004-ம் ஆண்டுக்கு முன்பு பணியில் சேர்ந்த மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு வரை யறுக்கப்பட்ட ஊதியம் வழங்கப் பட்டு வந்தது. இதன்மூலம் ஊழியர் களின் சம்பளத்தில் பிடித்தம் எதுவும் செய்யப்படாது. ஓய்வு பெற்ற பின்பு அடிப்படை சம்பளத் தில் 50 சதவீதம் ஓய்வூதியம் அளிக்கப்பட்டது. 

பி்எப் சந்தா தொகை செலுத்துவதில் மாற்றம் ! மத்திய அரசு முடிவு

பணியாளர்களிடம் பிடிக்கப்படும் பி.எப். சந்தா தொகையை உயர்த்தும் வகையில் மத்திய அரசு புதிய மசோதாவை உருவாக்கி உள்ளது.பி.எப்.அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் மற்றும் அமைப்புசார்ந்த தொழிலாளர்களிடம் பி.எப். எனப்படும் சேமநல நிதி பிடிக்கப்படுகிறது.
ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தின் அடிப்படையில்தான் தற்போது பி.எப். சந்தாதொகை கணக்கிடப்படுகிறது.ஒரு ஊழியரின் அடிப்படை சம்பளம் எவ்வளவு இருந்தாலும், அதை 15 ஆயிரம் ரூபாய் என உச்சவரம்பாக கொண்டு, அதில் 12 சதவீத தொகை பி.எப். சந்தா தொகையாக பிடிக்கப்படுகிறது. அந்தவகையில், ரூ.15 ஆயிரம் மற்றும் அதற்கு மேல் அடிப்படை சம்பளம் கொண்ட ஊழியர்களிடம் 12 சதவீத தொகையான ரூ.1,800, பி.எப். சந்தா தொகையாக பிடித்தம் செய்யப்படுகிறது.இதே அளவு தொகையை அவர் பணிபுரியும் தொழில் நிறுவனமும் செலுத்தி வருகிறது.

ஓய்வூதியதாரருக்கு புதிய திட்டம் குடிநீர் வாரியம் அறிவிப்பு: ஓர் ஆண்டுக்கு பிறகு நடைமுறை

   ஓய்வூதியதாரர்கள் பயன்பெறும் வகையில் புதிய திட்டத்தைசென்னை குடிநீர் வாரியம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன்படிஓய்வூதியர் இறந்தால் அவரது வாரிசுகளுக்கு ரூ.50 ஆயிரம்வழங்கப்படும். இதுகுறித்து சென்னைக் குடிநீர்வாரியம்வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

      சென்னை குடிநீர் வாரியம் செயல்படுத்தப்பட உள்ள புதியதிட்டத்தின்படி, ஓய்வூதியதாரர்களிடமிருந்து மாதம் ரூ.80ஓய்வூதியத்திலிருந்து அவர் உயிரோடு இருக்கும் வரை பிடித்தம்செய்யப்படும். அவர்களிடமிருந்து முதல் 12 மாதங்கள் பிடித்தபின்னரே இத்திட்டத்தில் இருந்து பயன்பெறுவது நடைமுறைக்குவரும். அதற்குப் பின்னர் ஓய்வூதியர் இறந்தால் அவருடையமனைவி அல்லது கணவர் / உயிரோடு இல்லாவிடில் அவர் நியமனம்செய்த நபர் அல்லது வாரிசுதாரர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்.

இத்திட்டத்துக்கான நியமனப் படிவத்தை குடிநீர் வாரியம் தபால்மூலமாக தனது ஓய்வூதியதாரர்களுக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறது. மேலும் இப்படிவத்தை வாரியத்தின்இணையதளமான www.chennaimetrowater.tn.nic.in ல் பதிவிறக்கம் செய்துபயன்படுத்தலாம்.

அக்.15-க்குள் படிவங்களை அனுப்ப வேண்டும்

பூர்த்தி செய்யப்பட்ட படிவம், துணை நிதிக் கட்டுப்பாட்டு அலுவலர்,சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், எண்.1,பம்பிங் ஸ்டேசன் ரோடு, சென்னை-2 என்ற முகவரிக்கு அக். 15-க்குள்அனுப்ப வேண்டும். தவறும்பட்சத்தில் ஓய்வூதியதாரர்கள்இத்திட்டத்தில் சேருவதற்கு விருப்பம் உள்ளதாகக் கருதி தங்களதுஓய்வூதியத்திலிருந்து ரூ.80/-ஐ இந்த மாதம் முதல் பிடித்தம்செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு சென்னைக் குடிநீர்வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்கூறப்பட்டுள்ளது.

வருங்கால வைப்பு நிதி (PF) சந்தாதாரர்கள் வங்கிக் கணக்கு அளிப்பது கட்டாயம்

வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள் நிரந்தரப் பொதுக் கணக்கு எண்ணைப் பெற வங்கிக் கணக்கு எண் அளிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மண்டலத் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையர் நிலிண்டு மிஸ்ரா வெளியிட்டுள்ள செய்தி:
வருங்கால வைப்பு நிதி (பி.எஃப்) சந்தாரர்கள் நிரந்தரப் பொதுக் கணக்கு எண்ணைப் பெற வங்கி கணக்கு எண்ணை, "ஐஎஃப்எஸ்சி' குறியீட்டுடன் அளிக்க வேண்டும்.

தற்போதைய சந்தாதாரர்களின் வங்கிக் கணக்கு எண் குறித்த விவரங்களை அக்டோபர் 15-ஆம் தேதிக்கு முன்பும், முந்தைய சந்தாதாரர்களின் விவரங்களை அக்டோபர் 31-ஆம் தேதிக்கு முன்னரும் தொழில் நிறுவனங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

இதுவரை வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள் 1.80 கோடி பேரிடம் வங்கிக் கணக்கு எண்களும், நிரந்தரக் கணக்கு எண் (பான் கார்டு) குறித்த விவரங்கள் 86.9 லட்சம் பேரிடமும், ஆதார் அடையாள அட்டை எண் குறித்த விவரங்கள் 28 லட்சம் பேரிடமும் இருந்து பெறப்பட்டுள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொகுப்பு ஊதியத்தில் 1.4.2003 முன் பணியில் சேர்ந்து பின் நிரந்தரம் செய்ய பட்டாலும் ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும்

IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS

DATED  :  14.06.2012

CORAM

THE HON'BLE Mr. JUSTICE N. PAUL VASANTHAKUMAR

Writ Petition No.14987 of 2012

S.Simieon Raj      ... Petitioner

Vs.

1. Government of Tamil Nadu
    Rep. by its Secretary to Government
    Forest and Environment Department
  Fort St.George
  Chennai 600 009.

கிராஜுவிட்டி, குடும்ப ஓய்வூதியம் இல்லாத புதிய பென்ஷன் திட்டம்: 2 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பாதிப்பு

புதிய பென்ஷன் திட்டத்தில் கிராஜுவிட்டி, குடும்ப ஓய்வூதியம் இல்லாததால் தமிழகத்தில் ஒரு லட்சம் ஆசிரியர்கள் உள்பட 2 லட்சம் அரசு ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய அரசுப் பணியில் கடந்த 2004-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதிக்கு பிறகும், தமிழக அரசுப் பணியில் 2003 ஏப்ரல் 1-க்கு பிறகும் சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவரும் புதிய ஓய்வூதிய திட்டத்தின் (என்.பி.எஸ்.) கீழ் சேர்க்கப்படுகின்றனர்.
புதிய பென்ஷன் திட்டத்தின்படி, அரசு ஊழியரின் அடிப்படைச் சம்பளம், தர ஊதியம், அக விலைப் படி ஆகியவற்றில் ஒவ்வொரு மாதமும் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு பங்களிப்பு ஓய்வூதிய நிதியில் (சி.பி.எப்.) சேர்க் கப்படுகிறது. அதே தொகைக்கு இணையான தொகையை அந்த ஊழியரின் கணக்கில் செலுத்து கிறது. இவ்வாறு சேரும் தொகை யில் 60 சதவீதம், அந்த ஊழியர் ஓய்வு பெறும்போது மொத்தமாக வழங் கப்படும். மீதமுள்ள 40 சத வீதத் தொகை, பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்பட்டு மாதாமாதம் ஓய்வூதியமாக அவருக்கு அளிக்கப்படும்.