மின்சாரத்துறை இணையதள சேவை தற்காலிக நிறுத்தம்!


சென்னை: வரும் 25ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை தொழில் நுட்ப மேம்பாட்டு செயல்களின் நிமித்தம் காரணமாக தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் இணையதளம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் இணையதளம் (www.tnebnet.org) மூலம் வழங்கப்படும் சேவைகள் 25.7.2014 மாலை 4 மணி முதல் 26.7.2014 மாலை 6 மணி வரை சில தொழில் நுட்ப மேம்பாட்டு செயல்களின் நிமித்தம், தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படவுள்ளது.

அத்தருணங்களில் இணையதளம் (www.tnebnet.org) மூலம் மின்கட்டணம் செலுத்தும் சேவை, மின் கட்டண நிலையை அறிதல், மின்னஞ்சல் சேவை, ஒப்பந்தப்புள்ளி தொடர்பான சேவைகள் வழங்க இயலாது. இருப்பினும் அக்காலங்களில் நுகர்வோர் தங்களுக்கு அருகாமையில் உள்ள மின்வாரிய பிரிவு அலுவலகங்களில் வழக்கம் போல தங்களது மின் கட்டணங்களை செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என்று கூறப்பட்டுள்ளது.

No comments:

வாடகைதாரர் சட்டப்படி வசித்தால் உரிமையாளர் கேட்டாலும் மின் துண்டிக்க முடியாது – மின் இணைப்பு & மின் துண்டிப்பு தொடர்பான மின்வாரிய ஆணைகள்

ந்த கேள்விக்கு பதில் வழங்கும்போது, Tamil Nadu Generation and Distribution Corporation Limited (TANGEDCO) வெளியிட்ட சுற்றறிக்கைகள், Electrici...