மின்சார சட்டம் 2003 : திருத்தம் கோரும் மின்வாரிய சங்கங்கள்

சென்னை, செப். 25 -தேசிய மின்சார பொறியாளர் மற் றும் தொழிலாளர் கூட்டமைப்பின் தமிழகப் பிரிவு கூட்டம் 23.9.2014 அன்றுசென்னையில் நடைபெற்றது. அக் கூட்டத்தில் வி.இராமச்சந்திரன், எம்.தங்கவேலு சம்மேளனம் சார்பாகவும், எஸ்.எஸ்.சுப்ரமணியன், கே.விஜயன், மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) சார்பாகவும், சிங்கார ரத்தின சபாபதி, எம்.சடாட்சரம், தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பாகவும், அப்பர்சாமி, சங்கர நாராயணன், பொறியாளர் கழகம் சார்பாக வும், வி.அசோக்குமார், தமிழ்நாடு மின்சார வாரிய பொறியாளர் சங்கம் சார் பாகவும், கே.அருள்செல்வன், தி.அறி வழகன் தமிழ்நாடு மின்வாரிய பொறி யாளர் அமைப்பு சார்பாகவும் கலந்து கொண்டனர்.
அக்கூட்டத்தில் இந்திய நாடு சுதந்திரம் பெற்று 67 ஆண்டுகள் கடந்த பின்னரும் 40 சதவீதம் இந்திய மக்களுக்கு மின்சாரம் கனவுப் பொருளாகவே உள்ளது என்றும் மின்துறையில் நிரந்தர தொழிலாளர்களின் எண்ணிக்கையை குறைத்து, ஒப்பந்த, அவுட்சோர்சிங் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தி உழைப்புச்சுரண்டலை அமலாக்குவது போன்ற வைகள் சம்பந்தமாக பரிசீலித்து பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.சேவைத்துறையாம் மின்துறையை பொதுத்துறையாகவே பாதுகாத்திட மின்சாரச் சட்டம் 2003ல் திருத்தம் செய்வது, ஒப்பந்த தொழிலாளிகளை பணிநிரந்தரம் செய்வது, மின்வாரிய பிரிப்பு அம லாக்கத்தையொட்டி, ஏற்பட உள்ள முத் தரப்பு ஒப்பந்தத்தை காலதாமதமின்றி ஏற்படுத்திட வேண்டும்.
தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்து அனைவருக் கும் மின்சாரத்தை அளித்திட வேண்டும். உபகோட்டத்திற்கு ஒரு மின்தடை பழுதுநீக்கும் மையம் உருவாக்குவது. களப்பிரிவு மற்றும் அலுவலகப் பிரிவு களில் காலியாக உள்ள பணியிடங்களை பதவி உயர்வு உள்ளிட்டவை வழங்கி உடனடியாக நிரப்பிட வேண்டும்.வாரியத்தின் வருவாயை முறைப் படுத்திடும் வகையில் அட்டைப்பட்டியல் பிரிவில் காலிப் பணியிடங்களை நிரப் பிடுவது, புதிய பென்சன் திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட் டத்தை அமலாக்குவது, சிபிஎஸ் திட்டத் தில் பணம் பிடித்ததற்கு சரியான கணக்குவிபரச் சீட்டை உடனடியாக வழங்கிடு வது.
ஆண்டிற்கு ஒரு முறை களப் பிரிவு உள்ளிட்ட அனைத்துப் பிரிவு ஊழியர்களுக்கும் மார்சு 31க்குள் முதன்மை பட்டியல் வழங்கிடுவது, பதவி உயர்வுஒதுக்கீடு, ஊர் மாற்றங்களில் வாரியவிதிமுறைகளை முறையாக அமல் படுத்திடுவது ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். பிரிவு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர் களுக்கு தேவையான அடிப்படை வசதி களை உடனடியாக செய்து தருவது போன்ற கோரிக்கைகளை முன் வைத்து8.7.2014 அன்று தேசிய மின்சார பொறி யாளர் மற்றும் தொழிலாளர்களின் கூட் டமைப்பு முடிவின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் முழக்கங்களை தொழிலாளர்கள் மற்றும் பொது மக்கள் மத்தி யில் கொண்டு செல்லும் வகையில் இந்த இணைப்புக்குழு சங்கங்கள் எதிர் வரும் 14.10.2014 அன்று மின்வாரிய அலுவலகங்கள் முன்னர் பிரச்சார கூட்டங் களை நடத்திட முடிவு செய்துள்ளது
நன்றி தீக்கதிர்

No comments:

Acceptance of Consumer Meter

  Acceptance of Consumer Meters - Details of retail outlet of the firm M/s. Holley Meters India LLP, Derabassi for sale of consumer meters o...