சென்னையில் மூன்று இடங்களில் ஸ்மார்ட் மின் மீட்டர்கள் சோதனை ( தினமணி செய்தி )

தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மானக் கழகம் சார்பில் சென்னையில் மூன்று இடங்களில் ஸ்மார்ட் மீட்டர்களின் சோதனை தொடங்கியது.
 சிந்தாதிரிப்பேட்டை உள்ளிட்ட மூன்று இடங்களில் இந்த மீட்டர்களும், அவற்றுக்குத் தேவையான நவீன வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த இடங்களில் ஸ்மார்ட் மீட்டர்கள் நல்ல முறையில் செயல்படுவதாகத் தெரிந்தால் மட்டுமே, உயர் மின் அழுத்த நுகர்வோர், வணிக நிறுவனங்களுக்கு ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
 துல்லியமான மின் கணக்கீடு, மின் பயன்பாட்டை வீடுகளுக்குச் செல்லாமலே கணக்கிடுவது, கட்டணத்தைச் செலுத்தத் தவறும் நுகர்வோரின் மின் இணைப்பை அலுவலகத்தில் இருந்தபடியே துண்டிப்பது உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளை ஸ்மார்ட் மீட்டர்கள் மூலம் மேற்கொள்ளலாம்.
 அடுத்த மூன்று மாதங்களுக்கு இவற்றின் பயன்பாடு கண்காணிக்கப்படும். இந்த மீட்டர்களின் உற்பத்தியாளர்கள் கூறும் அனைத்தும் நடைமுறையில் சாத்தியமானால் மட்டுமே மேற்கொண்டு பயன்படுத்தப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். முதல்கட்டமாக உயர் மின் அழுத்த நுகர்வோர், வணிக நிறுவனங்களுக்கு ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட உள்ளன.

No comments:

இதை செய்தால் இனி மின்கட்டண அபராதம் கிடையாது.

⚡ இனி மின்கட்டண அபராதம் கிடையாது..! தமிழ்நாடு மின்விநியோகக் கழகம் (TNPDCL) புதிய "EB Auto Pay" வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. 📌 ம...