அண்ணா பல்கலை மூலம் மின் வாரிய ஊழியர் தேர்வு ( தினமலா் செய்தி )

தமிழ்நாடு மின் வாரியத்தில், உதவியாளர், கணக்கீட்டாளர், பொறியாளர் என, 1.38 லட்சம் பணியிடங்கள் உள்ளன. இதில், 88 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர்; எஞ்சிய பணியிடங்கள் காலியாக உள்ளன. இதையடுத்து, 'பொறியாளர், உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படும்' என, அரசு தெரிவித்தது. புதிய ஊழியர்களை, அண்ணா பல்கலை மூலம் எழுத்து தேர்வு நடத்தி நியமிக்க, மின் வாரியம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, அதிகாரி ஒருவர் கூறியதாவது:உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின் படி, ஊழியர் நியமனம் முறைகேடு இல்லாமல், வெளிப்படையாக நடத்தப்படும். எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு நடத்தி, புதிய ஊழியர்கள் நியமிக்கப்படுவர். 
இது குறித்த அறிவிப்பு, ஓரிரு நாளில் வெளியாகும்.அதில், தேர்வு நடைமுறை குறித்த விவரங்கள் இடம்பெற்று இருக்கும். வேலைக்காக, யாரும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். 
இவ்வாறு அவர் கூறினார். 

********************************************************************************************************
TNEB ல் நேரடி நியமனத்தை எதிா்நோக்கியுள்ள அணைவரும் தங்களின் கருத்துக்களை பகிா்ந்து கொள்ள வசதியாக ஒரு முகநுால் குழு உருவாக்கப்பட்டுள்ளது விருப்பமுள்ள நபா்கள் இக்குழுவில் இணைந்து கொள்ளலாம் 

TNEB Recruitment 2015-16

குழுவில் இணைய இங்கே  கிளிக் செய்யவும் https://www.facebook.com/groups/1662721517343327/members

மேலும் தங்கள் நண்பா்களுக்கு இத்தகவலை பகிரவும் 

No comments:

Acceptance of Consumer Meter

  Acceptance of Consumer Meters - Details of retail outlet of the firm M/s. Holley Meters India LLP, Derabassi for sale of consumer meters o...