Preparation of panel of Executive Engineers/Electrical fit for promotion as Superintending Engineers/Electrical for the year 2018-2019 – Punishment – Particulars - Called



TAMIL NADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LIMITED

                                                                                       SECRETARIAT BRANCH
                                                                    144, ANNA SALAI,
                                                                                      CHENNAI-600 002.

Letter No. 27381/A1/A12/2018-2, dated 24.07.2018.

From
Thiru R.BALAJI, M.A., P.G.D.L.A.,
Secretary.

To
All Chief Engineers (w.e)

Sub:
Establishment - Class I Service – Preparation of panel of Executive Engineers/Electrical fit for promotion as Superintending Engineers/Electrical for the year 2018-2019 – Punishment – Particulars - Called for.

Store Custodian II Grade by internal selection – Allotment


View Download

TAMIL NADU GENERATION & DISTRIBUTION CORPORATION Ltd.
(Administrative Branch)

                                                                         8th Floor, NPKRR Maaligai,
                                                                         144, Anna Salai, Chennai-2.

Memo. No.059392/763/G.34/G.342/2018,  dated : 21.07.2018.

Sub :
Recruitment (Internal) – Class III Service filling up of vacancies of Store Custodian II Grade by internal selection – Allotment of individuals for Temporary appointment – Orders – Issued.


Ref:
The SPO/R U.O. Note No.109674/843/G56/G562/ 2016 , dated 09.07.2018.

*****

3 வருடங்களுக்கு மேல் உள்ள காலிபணியிடங்கள் விபரம் வேண்டுதல் தொடர்பாண கடிதம்


View Download

479 Asst to Acct Supr Suitability Called for crucial dt.20.03.18


View Download



View Download

TNNHIS புதிய இன்சூரன்ஸ் கார்டு இதுவரை பெறாத அரசு ஊழியர்கள் ECARD பதிவிறக்கம் செய்வது எப்படி ?

இது வரை கார்டு வராதவர்கள் கீழே உள்ள இந்த லிங்கை கிளிக் செய்து அதில் தங்கள் NHIS  மாவட்ட பொருப்பாளர் தொடர்பு எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

அடையாள அட்டை இல்லாதவர்கள் மருத்துவ சிகிச்சை தேவைப்படும் போது கொடுக்க வேண்டிய ANNEXURE - VII  இங்கே கிளிக் செய்யவும்

அடையாள அட்டை இல்லாதவர்கள் ECARD பதிவிறக்கம் செய்ய இந்த   லிங்கை கிளிக் செய்து  கீழே உள்ள படத்தில் காட்டியவாறு பிறந்தநாள் மாவட்டம் பணிநிறைவு நாள் ஆகியவற்றை கொடுத்து தங்களது NHIS_ID_Card_Number  ஜ தெரிந்து கொள்ளலாம் பின்னர் இந்த லிங்கில் சென்று தங்கள் NHIS_ID_Card_Number    மற்றும் தங்கள் பிறந்த நாளை கொடுத்து  தங்களது ECARD ஜ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.



RWE more then 3 years Transfer Excemption orders



Engagement of ITI Apprentice.pdf View Download


View Download

EE (Civil ) Transfer & Promotion Orders


View Download



View Download

Provision of NHIS-2018 For Pensioners G.O


View Download

Inter- Se-Seniority of Assistant Engineer / Electrical fixed for the year 2007 - Tentative Seniority List


View Download


TAMILNADU GENERATION & DISTRIBUTION CORPORATION LTD.
(Administrative Branch)
         
144, Anna Salai,
   Chennai - 600 002

Memo. No.037499/1435/G.18/G.181/2018-2,   Dated:18.07.2018.


Sub
:
Estt. - Class II Service - Inter-Se-Seniority of Assistant Engineers/Electrical fixed for the year 2007 - Tentative  Seniority List - Issued.

ஒரே இடத்தில் 10 ஆண்டுகளாக பணிபுரியும் மின்வாரிய களப்பணியாளர்களை இடமாற்றம் செய்ய அதிரடி முடிவு - தினகரன் செய்தி


  களப்பணியாளர்களை இடமாற்றம் செய்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். தமிழ்நாடு மின்வாரியத்தில் போர்மேன்கள், உதவியாளர்கள், வயர்மேன்கள், மின்வழித்தட ஆய்வாளர்கள், வணிக ஆய்வாளர்கள் ஆகிய களப்பணியாளர்கள் 30,000க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். இதுதவிர, உதவி பொறியாளர்கள், ஜூனியர் பொறியாளர்கள், மேற்பார்வை பொறியாளர்கள், கண்காணிப்பு பொறியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் உள்ளனர். மாநிலத்துக்கே வெளிச்சம் கொடுக்கும் பணி என்பதால், மின்வாரியத்துக்கு அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. இருப்பினும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் முறைகேடு மற்றும் சரியான திட்டமிடல் இல்லாததால் வாரியம் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருகிறது. சமீபத்தில் கூட, நிலக்கரி இறக்குமதியில் ஏற்பட்ட குளறுபடியால் வாரியத்துக்கு 740 கோடி கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளதாக தணிக்கை துறை தெரிவித்தது. அதேபோல் மின்கொள்முதல், திட்டங்களை தாமதப்படுத்துதல் என அதிகாரிகள் மட்டத்தில் பல முறைகேடுகள் நடக்கிறது. அதேசமயம், கீழ்மட்ட அளவிலும் வாரியத்தில் லஞ்சம் தலைதூக்கியிருப்பதாக புகார் எழுந்துள்ளது. அதாவது, புதிய மின் இணைப்பு பெறுதல், வயரில் ஏற்பட்ட பிரச்னையால் மின்சாரம் தடைபடுதல், மீட்டர் பிரச்னை என பல அடிப்படை பிரச்னைகளுக்கு போர்மேன், வயர்மேன் உள்ளிட்ட களப்பணியாளர்களைதான் பொதுமக்கள் நாடுகின்றனர்.

       சொந்த ஊரில் பணிபுரிவதால், களப்பணியாளர்கள் பலர் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு சிபாரிசு அடிப்படையில் பணிகளை முடித்துக் கொடுப்பதாகவும், அதனால் வாரியத்துக்கு நஷ்டம் ஏற்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. உதாரணமாக, வீட்டில் மின் மீட்டர் தற்போதுள்ள இடத்தில் இருந்து வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்றால் 500 முதல் 1000 வரை கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால் பலர், தங்களுக்கு நன்கு பழக்கம் உள்ள வயர்மேன்களை சிபாரிசு பிடித்து கட்டணம் செலுத்தாமலேயே, தனியார் எலக்ட்ரீசியன்கள் மூலம் மீட்டரை இடமாற்றம் செய்கின்றனர். இதுபோன்ற பல பணிகளில் களப்பணியாளர்கள் விதிமீறல் செய்வதாக மின்வாரியத்தின் தலைமை அலுவலகத்துக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில், கீழ்மட்ட அளவில் நடக்கும் லஞ்சத்தை ஒழிக்கும் வகையில் 10 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரியும் களப்பணியாளர்களை இடமாற்றம் செய்ய மின்வாரியம் அதிரடியாக முடிவு செய்துள்ளது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:

பல ஆண்டுக்குப் பின், வாரியத்தின் நஷ்டம் தற்போது 4,000 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. நிர்வாகத்தில் பல அதிரடி மாற்றங்களை மேற்கொள்வதன் மூலம் வாரியத்தை லாபத்தில் இயக்க முடியும். எனவேதான், பொறியாளர்களை நேர்முக தேர்வின்றி எழுத்து தேர்வு மூலம் தேர்ந்தெடுப்பது, 3 ஆண்டுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரியும் பொறியாளர்களுக்கு ஆன்லைனில் இடமாறுதல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் நடைபெறுகின்றன. அதிகாரிகளை தொடர்ந்து, கீழ்மட்ட அளவில் முறைகேடுகளை தவிர்த்து மக்களுக்கு வாரியத்தின் மேல் நம்பிக்கை ஏற்படும் வகையில் பல மாற்றங்களை செய்ய முடிவு செய்துள்ளோம். அதன்படி, 10 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரியும் களப்பணியாளர்கள் இடமாற்றம் செய்யப்படுவார்கள். முதல்கட்டமாக நடந்த ஆய்வில், 10,000 பேரை ஒரே நேரத்தில் இடமாற்றம் செய்ய யும் பணிகள் நடந்து வருகிறது என்றார்.

நாட்டிலேயே முதல் முறையாக நீர் மின்னுற்பத்தி குறித்த அருங்காட்சியகம்: மாணவர்கள் பார்வையிட அழைப்பு

நீர் மின் உற்பத்தி குறித்த அருங்காட்சியகம்
தென்னகத்தின் தண்ணீர்த் தொட்டி என்று அழைக்கப்பட்ட நீலகிரி மாவட்டத்தில் ஆங்கிலேயர் வருகையின்போது சிறிய அளவில் முதல் முதலாக நீர் மின் உற்பத்தியைத் தொடங்கினர். இங்கு உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரம், தமிழகத்தின் ஈரோடு, கோவை, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு மட்டுமல்லாது அப்போதைய திருவாங்கூர் மாகாணம் தற்போதைய கேரள மாநிலம், மைசூர் உடுப்பி உள்ளிட்ட பகுதிகள் வரை மின் விநியோகம் செய்யப்பட்டது.

சுதந்திர இந்தியாவில் முதன் முதலாக காமராஜர் நீலகிரியில் உற்பத்தியாகும் ஆறுகளின் குறுக்கே பல கோடி மதிப்பில் பல அணைகளை கட்டினார். பைக்காரா, அவலாஞ்சி, அப்பர் பவானி, கெத்தை, குந்தா, சிங்காரா உள்ளிட்ட இடங்களில் கனடா மற்றும் ரஷ்ய நாட்டுத் தாெழில் நுட்பங்களைப் பயன்படுத்தி மிகப் பெறும் நீர் மின்நிலைய திட்டங்களுக்கு அஸ்திவாரமிட்டார். நாட்டுக்குப் பெரும் பயன்தரக் கூடிய இத்திட்டத்தை சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு நேரில் வந்து அடிக்கல்நாட்டி திட்டங்களைத் தொடங்கிவைத்தார். போதிய இயந்திர வசதியோ நவீன கருவிகளோ இல்லாத சூழலிலேயே மலைக்க வைக்கக்கூடிய மாபெரும் திட்டத்தை சுமார் 10,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் விடுப்பின்றி வேலை செய்து சுமார் மூன்றரை ஆண்டுகளில் நிறைவேற்றினர். இத்திட்டத்தால், நீலகிரி மாவட்டத்தில் உள்ள நீர் மின் நிலையங்கள் மூலம் தமிழகத்துக்குத் தேவையான 833.60 மெகவாட் மின்சாரம், மிக குறைந்த செலவில் உற்பத்தி செய்யப்பட்டு, விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில், ஆங்கிலேயர் காலம் முதல் பல்வேறு பரிணாமங்களில் படிப்படியாக வளர்ச்சியடைந்த நீர் மின் நிலைய செயல்பாடுகளையும் மற்றும் உற்பத்தி விவரத்தைப் பொதுமக்கள் மற்றும் தொழில் நுட்ப மாணவர்கள் தெரிந்துகாெள்ளும் வகையில் அருங்காட்சியகம் அமைக்க தமிழ்நாடு மின்சார வாரியம் திட்டமிட்டது. அதன்படி, நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து சுமார் 30 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ள குந்தா மின்வாரிய அலுவலக வளாகத்தில் சமீபத்தில் நீர் மின் உற்பத்தி மற்றும் செயல்பாடு குறித்த வரலாற்று அருங்காட்சியகம் திறக்கப்பட்டது.
அருங்காட்சியகத்தில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர் மின் நிலையங்களின் அடிக்கல் நாட்டு விழா, கட்டுமானப் பணிகளை  ஜவகர்லால் நேரு, காமராஜர், கக்கன், மொராஜிதேசாய் உள்ளிட்ட தலைவர்கள் ஆய்வு மேற்காெண்டது உள்ளிட்டவை அடங்கிய வரலாற்றுப் புகைப்படத் தொகுப்புகளும், 600க்கும் அதிகமான மின் உற்பத்தி மற்றும் பகிர்மானத்துக்கு பழங்காலம் முதல் பயன்படுத்தப்பட்டு வந்த கருவிகள் மற்றும் உதிரிபாகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், இந்த அருங்காட்சியகம் இருபதாம் நுாற்றாண்டின் இரண்டாம் பாதிவரை நீலகிரி மாவட்டத்தின் பங்களிப்பையும் விளக்கும் வகையில் அமைந்துள்ளது. தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவில் உள்ள பல்வேறு வகையான நீர் வழி மின்சார திட்டங்களின் வரலாற்றை விவரிக்கும் விதமாக உள்ள அருங்காட்சியகம், தொழில் நுட்பக் கல்லுாரி மாணவர்களுக்குத் தேவையான ஆவணங்கள் அடங்கியுள்ள மையமாகவும் விளங்குகிறது. இந்த அருங்காட்சியகத்தைப் பார்வையிடுவதன் மூலம் மாணவர்கள் மற்றும் ஆய்வாளர்கள் பழங்கால அணைக்கட்டும் முறை, பராமரிப்பு உள்ளிட்டவற்றை எளிதில் தெரிந்துகொள்ளலாம். சிங்காரா முதல் கெத்தை வரை உள்ள நீர் மின் நிலையங்களில் பயன்பாட்டில் இல்லாத பொருள்களைச் சேகரித்து அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தியுள்ளனர்.

அருங்காட்சியகம் குறித்து குந்தா நீர் மின்உற்பத்தி நிலைய தலைமைச் செயற்பொறியாளர்  ரகு கூறுகையில், ``தமிழ்நாடு மின்சார வாரியத்தின் முதல் தலைவரான வி.பி.அப்பாதுரை முதலியார், கனடாவில் நிபுணத்துவம் பெற்று தமிழகம் மற்றும் இந்தியாவுக்கு நீர் மின் உற்பத்தியை அறிமுகப்படுத்தினார். மேலும் அருங்காட்சியகத்தில் அவர் நீர் மின் நிலையங்கள் குறித்து கனடாவில் இருந்துகாெண்டு வந்த 5 தொகுப்புகள் அடங்கிய புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, அப்பர் பவானி மற்றும் எமரால்டு அணைகளின் கட்டுமானப் பணிகள் குறித்து படிப்படியான புகைப்பட தொகுப்பு பிரம்மிப்பூட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. தாெழில்நுட்பம் குறித்து தெரிந்து காெள்ள ஆர்வமுள்ளவர்கள், பாெறியியல் மாணவர்கள் எங்களிடம் அனுமதிபெற்று இலவசமாக பார்வையிடலாம்’’என்றார்.  

Card Billing staff working hour

 Card Billing staff working hour     Click