25,000 தட்கல் மின் இணைப்பு உட்பட 50,000 புதிய இலவச விவசாய மின் இணைப்புகள்: அமைச்சர் அறிவிப்பு - தினகரன் செய்தி

தமிழக சட்டப் பேரவையில் நேற்று எரிசக்தித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்த பின்பு அமைச்சர் தங்கமணி வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:
* சூரிய மின்னாற்றலை ஊக்குவிக்கும் வகையில் தமிழகத்தில் 2020-21ம் ஆண்டில் 50 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மேற்கூரை அமைப்புகள்  ₹250 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.     
* இந்த ஆண்டு, 50,000 புதிய இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும். இதில், 25,000 விண்ணப்பதாரர்களுக்கு விரைந்து விவசாய மின் இணைப்பைப் பெறும் வகையில் விரைவு (தட்கல்) மின்னிணைப்பு வழங்கல் திட்டத்தின் மூலம்  விவசாய மின் இணைப்பு வழங்கப்படும். மேலும், 25,000 விண்ணப்பதாரர்களுக்கு சாதாரண வரிசை முன்னுரிமை, சுயநிதி திட்டம் மற்றும் அரசு திட்டங்களின் மூலம் இலவச விவசாய மின் இணைப்பு
வழங்கப்படும்.      
* மின்னணு முறையில் பணம் செலுத்தினால்  வீட்டு வாசலிலேயே வசூல் என்ற கூடுதல் வசதி  ₹1.75 கோடி மதிப்பீட்டிலும் ₹0.20 கோடி வருடாந்திர செலவிலும் அறிமுகப்படுத்தப்படும்.
* தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் கேங்மேன் (பயிற்சி) எனும் புதிய பணியிடம் உருவாக்கப்பட்டது. கடந்த ஆண்டு நடைப்பெற்ற மேற்காண் பணியிடத்திற்கான  உடற்தகுதி தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு மார்ச் மாத இறுதியில்  எழுத்து தேர்வு நடைபெறவுள்ளது. இப்பணி நியமனத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 5000 பணியிடங்களின் எண்ணிக்கை 10,000-ஆக உயர்த்தப்படும்.      
* தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை,  சென்னை போக்குவரத்துத்துறையுடன் இணைந்து, ₹7.4 இலட்சம் மதிப்பீட்டில் சென்னை நகரில் தற்போதுள்ள போக்குவரத்து சிக்னல்கள் மற்றும் கண்காணிப்பு கேமராக்களை  சேமிப்புடன் கூடிய சூரிய மின் நிலையம்  மூலம்  இயக்குவதற்கு தேவையான முயற்சிகளை படிப்படியாக  மேற்கொள்ளும்.     
* மின் ஆய்வுத் துறையில் இளநிலை மின் ஆய்வாளர் நிலையில் ஆண்டொன்றிற்கு ₹90.48 லட்சம் தொடர் செலவினத்தில், 20 பணியிடங்கள் கூடுதலாக உருவாக்கப்படும்.         
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Announcements of Energy Department - 2020-2021 - Tamil Version


View Download

விரைவில் ஸ்மார்ட் மின் மீட்டர் வசதி அறிமுகம் செய்யப்பட இருப்பதாக சட்டசபையில் அமைச்சர் பி.தங்கமணி கூறினார். - தினதந்தி செய்தி

சென்னை, 

தமிழக சட்டசபையில் நேற்று எரிசக்தித் துறை, உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசினார்கள். இறுதியாக உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து மின்துறை அமைச்சர் பி.தங்கமணி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஒரு மாநிலம் வளர சட்டம்-ஒழுங்கு, மனிதவளம், மின்சாரம் ஆகிய மூன்றும் இன்றியமையாதது. இது மூன்றும் உள்ள மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. தி.மு.க. ஆட்சி காலத்தில் தமிழகத்தில் 12 மணி நேர மின்வெட்டு இருந்தது. அ.தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற நிலையில், கடந்த 9 ஆண்டுகளில் 15,410 மெகாவாட் மின்சார உற்பத்தியை புதிதாக கொண்டு வந்திருக்கிறோம்.

ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு தடையில்லா மின்சாரம் வேண்டும். இப்போது ஒரு நிமிடம் கூட மின்வெட்டு இல்லை. மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மின்மிகை மாநிலம் என்று கூறியதை இன்றளவும் காத்து வருகிறோம். தமிழகத்தில் இப்போது 3 கோடியே 3 லட்சம் மின் இணைப்புகள் உள்ளன. தடையில்லா மின்சாரம் கொடுக்கப்பட்டு வருவதால், ஆந்திராவில் உள்ள கியா மோட்டார்ஸ் நிறுவனம் தமிழகத்திற்கு சென்றுவிடலாமா? என்று யோசித்துக்கொண்டிருக்கிறார்கள்.

அடுத்த 3 ஆண்டுகளில் 6,220 மெகாவாட் மின்சாரமும், அடுத்த 5 ஆண்டுகளில் 13,110 மெகாவாட் மின்சாரமும் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் மின்தேவை திருப்திகரமாக இருப்பதால் மின்வெட்டே இருக்காது. கடந்த 3 ஆண்டுகளில் புதிதாக 340 துணை மின்நிலையங்களை அமைத்துள்ளோம். காற்றாலை மின்சாரம் என்பது ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரை கிடைக்கிறது. அதிகமாக 5 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு கிடைக்கிறது. ஆனால், திடீரென்று 1,000 மெகாவாட் மின்சார உற்பத்தி குறைந்துவிடுகிறது. இதை ஈடுசெய்ய அனல்மின் நிலையங்களைத்தான் நாட வேண்டியுள்ளது.

மத்திய தொகுப்பில் இருந்து 6 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தர வேண்டும். ஆனால், 4 ஆயிரம் மெகாவாட் அளவுக் குத்தான் மின்சாரத்தை தருகிறார்கள். இதனால், மீதமுள்ள 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை நாம் காசு கொடுத்து வெளியே இருந்து வாங்க வேண்டியுள்ளது. அதனால், மின்துறைக்கு கூடுதல் செலவு ஏற்படுகிறது.

கடந்த 4 ஆண்டுகளில் தட்கல் திட்டத்தின் மூலம் 27 ஆயிரம் மின் இணைப்புகளும், இயல்பாக 60 ஆயிரம் மின் இணைப்புகளும் என மொத்தம் 87 ஆயிரம் மின் இணைப்புகள் விவசாயிகளுக்கு வழங் கப்பட்டுள்ளன. சென்னை தியாகராயநகர் பகுதியில் விரைவில் ஸ்மார்ட் மின் மீட்டர் வசதி செய்யப்பட உள்ளது. இதற்காக உள்ளாட்சி துறை நிதி ஒதுக்கியுள்ளது. இதனால், அலுவலகத்தில் இருந்தே வீட்டின் மின் அளவீட்டை கணக்கிட முடியும். பணம் கட்டாத பட்சத்தில் மின்சாரத்தை துண்டிக்கவும் முடியும். மின் துறைக்காக கடந்த 9 ஆண்டுகளில் ரூ.77 ஆயிரம் கோடி முதலீட்டு கடனாக வாங்கப்பட்டுள்ளது.

தரவரிசை முறை கேங்க்மேன் (பயிற்சியாளர்) பதவிக்கு நேரடி ஆட்சேர்ப்புக்கான தரவரிசை Direct Recruitment Gangman (Trainee) Ranking Methodology


View Download


தரவரிசை முறை கேங்க்மேன் (பயிற்சியாளர்) பதவிக்கு நேரடி ஆட்சேர்ப்புக்கான தரவரிசைக்கு வருவதற்கு பின்வரும் முறை பின்பற்றப்படும்: - 

1. ஓஎம்ஆர் தேர்வில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்களின் தகுதியின் அடிப்படையில் தரவரிசை இருக்கும்.  

2. ஒன்றுக்கு மேற்பட்ட  தேர்வர்கள் ஒரே மதிப்பெண்களைப் பெற்றிருந்தால், குறைவான தவறான பதிலைக் கொண்ட தேர்வர்கள் தரவரிசையில் அதிக இடத்தைப் பெறுவார்கள்.  பதிலளிக்கப்படாத கேள்விகள் தவறான பதிலாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது.  

3. ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட  தேர்வர்கள் ஒரே மதிப்பெண்கள் மற்றும் அதே எண்ணிக்கையிலான தவறான பதில்களைக் கொண்டிருந்தால், அவரது / அவள் பிறந்த தேதியின்படி மூத்தவராக இருக்கும்  தேர்வர்கள் தரவரிசையில் உயர்ந்த இடத்தில் வைக்கப்படுவார்.

  4. ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தேர்வர்கள் ஒரே மதிப்பெண்களைக் கொண்டிருந்தால், அதே எண்ணிக்கையிலான தவறான பதில்களையும் அதே பிறந்த தேதியையும் கொண்டிருந்தால், முன்னதாக ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பித்த தேர்வர்கள்
 தரவரிசையில் உயர்ந்த இடத்தில் இருப்பார்.  
                                                       மின்துறை செய்திகள் 

5. மேற்கூறிய பிறகும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட  தேர்வர்கள் சமமான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தால், பெயர்களின் அகர வரிசைப்படி தரவரிசை வரும்.

Change of Office hours at Spl.Mtc & Central Stores in Mettur EDC. Mettur Workshop and other office in MTPS I & II Approved Orders


View Download

Method of Appointment to the post of J.E. II Gr (Mech) Amendment Orders


View Download

Sanction of Advance Increment in Govt.Servants for passing Dept. Test Cancellation of advance increment in all Departments G.O.


View Download

மின் வாரியத்தில் நேரடியமணம் மூலம் ITI_முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு ஆயத்த பணிகளை தொடங்கியது மின்வாரியம் Direct Recruitment Field Assistant (Trainee) Certain Changes in Physical Test to be conducted Orders

2,900 கள உதவியாளர்கள் பணியிடங்களுக்கான உடற்தகுதி தேர்வுக்கான  விதிமுறைகள் மாற்றி வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பாணை



Direct Recruitment of Gangman (Trainee) written examination to be held on 15.03.2020 Hall ticket to be issued


View Download

மீட்டர் பழுதான காலத்திற்கான மின் நுகர்வு கணக்கீடு ( Regulation 11(2) & 11(5) )

  மீட்டர் பழுதான காலத்திற்கான மின் நுகர்வு கணக்கீடு TNERC Supply Code – Regulation 11(2) & 11(5) 📌 Regulation 11(2) மீட்டர் பழுதாகி...