கருணை வேலை கேட்டு அளிக்கப்படும் விண்ணப்பங்களை எவ்வாறு அணுக வேண்டும் என்பது தொடர்பாக உயர் நீதிமன்றம் புதிய உத்தரவை பிறப் பித்துள்ளது.
நெல்லையைச் சேர்ந்த ஒருவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில், கருணை வேலை கேட்டு அளிக்கப்படும் மனுக்களை அதி காரிகள் எவ்வாறு அணுக வேண் டும் என்பதுகுறித்து உயர் நீதி மன்றம் புதிய உத்தரவு பிறப்பித் துள்ளது.
நெல்லையைச் சேர்ந்தவர் எஸ்.வேல்ராஜ். இவரது தந்தை சண்முகய்யா மின்வாரியத்தில் உதவியாளராகப் பணிபுரிந்து 19.3.1992-ல் இறந்தார். அப்போது வேல்ராஜ் 12 வயது சிறுவனாக இருந்தார். மேஜரானதும் கருணை வேலை கேட்டு மின்வாரியத்துக்கு மனு அனுப்பினார். ஆனால் தந்தை இறந்து 3 ஆண்டுக்குள் விண்ணப்பிக்கவில்லை என்று கூறி அவரது மனுவை 15.7.2000-ல் மின்வாரிய அதிகாரிகள் நிராகரித் தனர். இதை ரத்துசெய்து வேலை வழங்கக் கோரி வேல் ராஜ் தாக்கல் செய்த மனுவை தனி நீதிபதி 13.9.2010-ல் தள்ளுபடி செய்தார்.