அரசு அலுவலகங்களின் கோப்புகளை அந்நியர்கள் பராமரிக்க அனுமதிக்கக் கூடாது: உயர்நீதிமன்றம்

முக்கியம் மற்றும் ரகசியமானதாகக் கருதப்படும் அரசுஅலுவலகங்களின் கோப்புகள் அல்லது ஆவணங்களைவெளிநபர்கள் அல்லது அந்நியர்கள் பராமரிப்பதற்கு அனுமதிக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


மூன்று மாத ஊதிய உயர்வை நிறுத்தி வைத்து போக்குவரத்துஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி வாகனஆய்வாளர் தாக்கல் செய்த மனுவில் உயர்நீதிமன்றம் இவ்வாறுஉத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பிரிவுஅலுவலக வாகன ஆய்வாளர் ..முத்து உயர்நீதிமன்றத்தில்தாக்கல் செய்த மனு விவரம்கடந்த 2005-ஆம் ஆண்டு நவம்பர் மாதம்28 ம் தேதி லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறைஅதிகாரிகள் மார்த்தாண்டம் பிரிவு வாகன ஆய்வாளர்அலுவலகத்துக்கு திடீரென ஆய்வு செய்தனர்.
அப்போதுமூன்று பெண்கள் உள்பட மொத்தம் ஐந்து வெளியாட்கள்அலுவலகத்தில் பணிபுரிவதையும்அவர்கள் அலுவலகஆவணங்களை கையாள்வதையும் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள்கண்டறிந்தனர்.

அதனால்தமிழக அரசு ஊழியர்களின் நடத்தை விதியைப்பின்பற்றவில்லை எனவும்பணியில் நேர்மை மற்றும்அர்ப்பணிப்புடன் செயல்படவில்லை எனவும் கூறி எனது மூன்று மாதஊதிய உயர்வை நிறுத்தி வைத்து கடந்த 2012-ஆம் ஆண்டு பிப்ரவரிமாதம் 29-ஆம் தேதி போக்குவரத்து ஆணையர் உத்தரவிட்டார்.

லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு அதிகாரிகள் திடீரென ஆய்வுக்குவரும் போது நான் அலுவலகத்தில் இல்லைமேலும்வெளிநபர்கள்அலுவலகத்தில் இருந்ததும் எனக்குத் தெரியாதுஏழுஆண்டுகளுக்குப் பிறகு தாமதமாக துறை ரீதியான நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளதுஇதுநான் மண்டல போக்குவரத்து அதிகாரியாகபதவி உயர்வது பெறுவதை இந்தக் குற்றச்சாட்டு தடுக்கும்எனவே,போக்குவரத்து ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யவேண்டும் என மனுவில் கோரப்பட்டது.
இந்த மனு நீதிபதி எம்.வேணுகோபால் முன்பு விசாரணை நடந்தது.விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவுதுறை ரீதியானநடவடிக்கை எடுப்பதற்கு ஏற்பட்ட தாமதத்துக்கான காரணம் திருப்திஅளிப்பதாக உள்ளதுஇது போன்ற தாமதம் நிர்வாகத்தில்இயல்பானது தான்குறிப்பாக குற்றம் சாட்டப்பட்டவர் பணியிடைநீக்கம் செய்யப்படவில்லை.
மனுதாரர் மீதான குற்றம் வெளிநபர்கள் அலுவலகத்தில் பணியாற்றஅனுமதித்தது தான்அரசு அலுவலகத்தில் அரசுப் பணியாளர்கள்மட்டும் தான் பணியாற்ற வேண்டும்வெளிநபர்களை அரசுஅலுவலகத்தில் அனுமதிக்கக் கூடாது என்பது வழக்கமான ஒருவிஷயம் தான்.

அதுஅரசு அலுவலகம் தொடர்பான கோப்புகள் அல்லதுஆவணங்கள் மிகவும் புனிதமானவை எனபதைநினைவுபடுத்துவதற்காகத் தான்அவையனைத்தும் முறையாகபணியமர்த்தப்பட்ட நபர்கள் அல்லது ஊழியர்கள் தான் பராமரிக்கவேண்டும்வெளியாட்கள்அந்நியர்கள் ஆகியோர்களால் பராமரிக்கஅனுமதிக்கக் கூடாதுஎனவேஇந்த மனு தள்ளுபடிசெய்யப்படுகிறது என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Card Billing staff working hour

 Card Billing staff working hour     Click