ஈரோட்டில் செப்டம்பர் 18ல் மின்வாரிய ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

"மின் வாரியத்தில் இருந்து ஓய்வு பெற்ற அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள், செப்டம்பர், 18ம் தேதி, ஈரோட்டில் நடக்கிறது' என, மேற்பார்வை பொறியாளர் மீனாட்சிசுந்தரம் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கை:தமிழ்நாடு மின்சார வாரிய உத்தரவுபடி, ஈரோடு மண்டல தலைமைப் பொறியாளரின் கட்டுப்பாட்டின் கீழ், ஈரோடு மண்டலம் மற்றும் அதன் பகுதியில் உள்ள பிற மின் வாரிய அலுவலகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற, மின்வாரிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் குறைகளை நேரில் கேட்கவும், மனுக்களை பெறவும், உடனடியாக தீர்த்து வைக்கவும், உரிய ஆலோசனை வழங்கவும், மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.அக்குழுவினர், ஒவ்வொரு காலாண்டுக்கு ஒருமுறை, ஈரோடு மண்டல அலுவலகத்தில் கூடி, மின் வாரியத்தில் இருந்து ஓய்வு பெற்ற அலுவலர், பணியாளர்களின் குறைகளை நேரில் கேட்கவும், மனுக்களை பெறவும், உரிய நிவாரணம் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.அதன்படி, 2014ம் ஆண்டு, மூன்றாம் காலாண்டுக்கான மின் வாரிய ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் கூட்டம், செட்பம்பர், 18ம் தேதி, காலை, 11 மணிக்கு, ஈரோடு மின் வாரிய ஆய்வு மாளிகையில் நடக்கிறது. மின் வாரியத்தில் இருந்து ஓய்வு பெற்ற அலுவலர்கள், பணியாளர்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்தி, தங்கள் குறைகளை தீர்த்துக்கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Card Billing staff working hour

 Card Billing staff working hour     Click